வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நடந்தது. புரட்டாசி மாத முதல் நாளான இன்று வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
* வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. புரட்டாசி மாத பூஜையில் பக்தர்கள் பங்கேற்று ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.