மேட்டுப்பாளையம்; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, குறிஞ்சி நகரில் உள்ள குறிஞ்சீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி, குறிஞ்சி நகரில், குறிஞ்சீஸ்வரர் கோவில் உள்ளது. இதில் குறிஞ்சிநாயகி அம்மன், முருகன், விநாயகர் உட்பட ஏராளமான சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கோவிலில் திருவிழா நடைபெற்றது. மகளிர் தங்கள் வீடுகளில் இருந்து, மாவிளக்கை, கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு குறிஞ்சீஸ்வரருக்கும், குறிஞ்சிநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜை செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் குறிஞ்சீஸ்வரர் மற்றும் குறிஞ்சி நாயகி அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.