பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று 17ல், கடைஞாயிறு திருவிழா துவங்கியது. சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை, மண் சட்டியில் மா விளக்கு ஏற்றி தலையில் சுமந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைஞாயிறு திருவிழா விமரிசையாக நடைபெறும்.இந்த திருவிழா, நேற்று 17 ம் தேதி முதல் வாரம் துவங்கியது.
சுற்று கிராமப் பகுதி மக்கள் ஏராளமானோர், சுவாமி தரினம் செய்தனர்.கோவில் குளத்தில் குளித்து விட்டு, புது மண் சட்டியில், மாவிளக்கு ஏற்றி, தலையில் சுமந்து, கோவிலை வலம் வந்து வழிபட்டால், நோய் தீரும் என்பது ஐதீகம்.இந்த விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் சுற்றியுள்ள பல கிராம பகுதி மக்கள் பங்கேற்பர்.
சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்து சுவாமி தரிசனம் செய்தனர்.வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடைபெறும் இந்த விழா, ஐந்து வாரங்கள் நடைபெறும். கோவிலில், இதற்காக பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.