முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2019 11:11
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், அம்பாள் அவதரித்த தினமான நேற்று பக்தர்கள் 1008பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை 3ஆம் தேதி முத்துமாரியம்மன் அவதரித்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.நேற்று காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தும், கரும்புத்தொட்டில் சுமந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முத்தாலம்மன் கோயிலில் இருந்து 1008பால்குடம் புறப்பட்டு ஊர்வலமாக, முத்துமாரியம்மன் கோயிலைவந்தடைந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 4:30மணிக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி உள்ளிட்டோர் செய்தனர்.