பதிவு செய்த நாள்
09
டிச
2019
04:12
வீரபாண்டி: திரளான பக்தர்களின், ’கோவிந்தா’ கோஷம் முழங்க, ரங்கபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி, ரங்காபுரத்தில், ரங்கபெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 6ல் கணபதி யாகத்துடன் தொடங்கியது. நேற்று (டிசம்., 8ல்) காலை, மேள, தாளம் முழங்க, பட்டாச்சாரியார்கள், யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீரை, கோபுர கலசத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து, கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மதியம், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ரங்கபெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின், அருகிலுள்ள, சவுடேஸ் வரி திருமண மண்டபத்தில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. மாலை, சர்வ அலங்கார த்தில் எழுந்தருளிய பெருமாள், தேவியர்களுடன் சப்பரத்தில் திருவீதி உலா வந்தார்.
மாரியம்மன் கோவிலில்...: இளம்பிள்ளை அருகே, கே.கே.நகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (டிசம்., 8ல்) காலை, யாக சாலையிலிருந்து, மூலவர் வரை கட்டப்பட்ட தர்பைபுல், பட்டு நூல் மூலம், அம்மனுக்கு உயிரூட்டம் கொடுக்கப்பட்டது. பின், வேதவிற்பன்னர்கள் கலசங்களை ஏந்தி, கோபுர உச்சிக்கு சென்று மந்திரம் ஓதி பூஜை செய்த னர். தொடர்ந்து, மாரியம்மனுக்கு கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். பின், தீயணைப்பு வாகனம் மூலம், பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதேபோல், ஏகாபுரம் பஞ்சுமாத் தாள் அம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.