பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நேற்றுமுன்தினம் இரவு முதலே கோவிலுக்கு வர துவங்கினர். நேற்று அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும் அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.