பதிவு செய்த நாள்
02
ஜூன்
2020
02:06
திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம், மார்ச், 20 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன், 1 முதல் அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில், சில தளர்வுகளை, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, கோவில்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை திறப்பது தொடர்பான முடிவுகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம், மத்திய அரசு விட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் ஆவலாக காத்திருப்பதால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை, தேவஸ்தானம் எடுத்து வருகிறது. திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு 6 அடி இடைவெளியுடன் கோயிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.