பதிவு செய்த நாள்
21
மே
2012
11:05
அன்னூர்: அக்னி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி, அம்மனை வழிபட்டனர். கோவில்பாளையம் அருகே உள்ள, கொண்டையம்பாளையம் அக்னி முத்துமாரியம்மன் கோவில், 100 ஆண்டு பழமையானது. இக்கோவிலில், பூச்சாட்டு திருவிழா, மே 2ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங் கியது. தினமும் மாலையில், பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும் சிறப்பு வழிபாடும் நடந்தது. பெண்கள், சிறுமியர், மாவிளக்கு எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். கோவில் பூசாரி சண்முக சுந்தரம் வேப்பிலை இல்லாமல், அரை மணி நேரம் கையில் அக்னி சட்டியை ஏந்தி, முக்கிய வீதிகளில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் கன்னத்திலும், முதுகிலும் அலகு குத்தி ஊர்வலமாக வந்து மாரியம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இணைந்த கைகள் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.