திண்டுக்கல்: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது.
வைகை நதியே தென்பாகமே அமைத்து வளம் கொழிக்கும் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மாநகர் மேட்டுப்பட்டியில் அமைந்த அஞ்சலி வரத ஆஞ்சநேயர் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். இவருக்கு நேற்று அனுமத் ஜெயந்தி விழா வைபவம் மிகவும் விமர்சையாக நடைபெற நடைபெற்றது. 12ம் தேதி காலை 8 மணிமுதல் பஞ்ச சூக்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், அனுத் சகஸ்ர நாம ஹோமம், 10-00 மணியளவில் மஹா பூர்ணாஹுதி. நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணியளவில் மிக பிரம்மாண்டமான அபிஷேகம் 1000 லிட்டர் பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகமும் அதை தொடர்ந்து ஏழுவகையான வர்னாபிஷேகமும் நவ கலச கும்ப அபிஷேகமும் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.