Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » மார்கழி, தை மாத சிவபூஜா விதி
படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
05:06

ஒன்பதாவது படலத்தில் மார்கழி மாதம், தை மாதம் செய்ய வேண்டிய விசேஷ பூஜாவிதி கூறப்படுகிறது. அதில் முதலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய தினத்தில் தேவருக்கு கிருதஸ்நான ஸமந்வித ஸ்நபனம் அல்லது கேவல ஸ்நபனம் செய்து, விசேஷமாக கந்தாதிகளால் தேவரை பூஜித்து பலவித கானங்களுடன் கிராம பிரதட்சிணம் செய்து, தேவரை ஆலய பிரவேசம் செய்க. அல்லது ராத்திரியிலும் பகலிலும் பலிஹோமங்களுடன் கூட ஸர்வாலங்காராயுதமாக பேரபிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவத்துடன் தீர்த்தோத்ஸவம் செய்து தேவாலய பிரவேசம் செய்க என்று கூறப்பட்டுள்ளது. பிறகு அங்கு ஸாயங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ள டோலரோஹணவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் டோலாகல்பனபிரகாரம் ஊஞ்சலில் தேவதாயஜனம் கூறப்படுகிறது. பிறகு ஊஞ்சலில் பலகை மேல் சிவன், இடப்பாகம் தேவி, மத்தியில் ஸ்கந்தரையும் ஆரோஹிக்க வேண்டும். அங்கு பலவித ந்ருத்யகான வாத்ய ஸஹிதம் ஈசனை சந்தோஷிக்க வேண்டும் என டோலோத்ஸவ விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு இந்த ஊஞ்சலுத்ஸவம் வேறு காலத்திலும் செய்ய வேண்டும். பிரதி தினமும் செய்யலாமென பக்ஷõந்தரமாக சூசிக்கப்படுகிறது. பேரா ரோஹநத்தோடு டோலாசலனம் இஷ்டமென்று கூறப்பட்டுள்ளது. இந்த பக்ஷத்தில் ஊஞ்சலில் தேவரை ஆரோஹித்து அந்த ஸாந்நியத்தை தியானிக்கவும் என டோலாரோஹன விதி கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் ஈச, ஈச்வரிக்கு விசேஷமாக நெய்யுடன் கூடிய பாயசத்தை அர்ப்பணிக்கவும் (தை) புஷ்யமாசத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் தேனபிஷேகம் மஹாஹவிர் நிவேதனம் நிவேதன முடிவில் பேரயாத்ரை செய்ய வேண்டுமென புஷ்யமாஸவிதி கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒன்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. மார்கழி மாதத்தில் ஆருத்ரா நட்சத்ரத்தில் முன் கூறிய விதிப்படி நெய் அபிஷேகத்தோடு கூட பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

2. விசேஷமாக ஸ்நபனம் மட்டும் செய்து சந்தனங்களால் பூஜித்து, பலவித கானங்களால் ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

3. கிராம பிரதட்சிணம் செய்து ஸ்வாமியை ஆலயத்தில் பிரவேசிக்க செய்து அல்லது ராத்திரியிலோ, பகலிலோ பலி, ஹோமம் செய்து

4. எல்லா அலங்காரங்களுடன் கூட, பிம்ப பிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவம், தீர்த்த உத்ஸவம் செய்து ஆலய பிரவேசனம் செய்ய வேண்டும்.
ஸாயங்காலத்தில் ஊஞ்சல் உத்ஸவம் செய்ய வேண்டும்.

5. ஸர்வாலங்காரயுதமாக வேண்டும், ஸ்தம்பல க்ஷணத்துடன் கூடிய இரண்டு ஸ்தம்பம் அமைத்து அதன் நடுவில் குறுக்கு ஸ்தம்பம் அமைக்க வேண்டும்.

6. நான்கு முழ அளவுள்ள ஊஞ்சலை அதன் நடுவில் அமைக்க வேண்டும். நான்கு சங்கிலியுடனும், ஊஞ்சல் மேல் விட்டத்தில் மூடக்கூடிய விதான வஸ்திரத்துடன் கூடியதாயும்

7. பல அலங்காரத்துடனும், இரு முழம் அளவுள்ள ஹம்ஸானத்துடன் அமைத்து புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

8. அஸ்திரமந்திர ஜலத்தால் பிரோக்ஷணம் செய்த பலகையில் ஆஸனத்தை கல்பித்து ஹ்ருதய மந்திரத்தால் அன்னப்பறவை தோகைகளாலான ஹம்ஸா ஸனத்தில் ஹம்ஸத்தை பூஜிக்க வேண்டும்.

9. வலது பக்கத்தில் பிரம்மாவையும், இடது பக்கத்தில் விஷ்ணுவையும் விஷ்டரமாகிய ஆஸன பாகத்தில் ருத்திரனையும், பலகையின் மேல் பாகத்தில் சிவனை பூஜிக்க வேண்டும்.

10. இடது பாகத்தில் தேவியையும், நடுவில் ஸுப்ரஹ்மண்யரையும் பூஜிக்க, அல்லது பலகையின் மேல் தேவியை சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவு

11. பலவித கானங்களுடனும், பல நிருத்தங்களுடனும், பலவித வாத்யங்களுடனும், கூட ஈஸ்வரனை மகிழ்விக்க வேண்டும்.

12. மற்ற சமயத்திலும் இஷ்டத்தை தரக்கூடிய ஊஞ்சல் உற்சவம் செய்யலாம். எல்லா விருப்பத்தையும் அடைவதற்காக பிரதிதினமும் செய்யலாம்.

13. பிம்பத்தை எழுந்தருளப்பண்ணியுமோ ஊஞ்சலாட்டுவதை செய்ய வேண்டும். இந்த மார்கழி மாதத்தில் மக நட்சத்திரத்தில் விசேஷமான நெய்யுடன்

14. கூடிய பால் பாயாசத்தை தேவியுடன் கூடிய சம்புவிற்கு அர்பணம் செய்யவேண்டும்.

15. தை மாசத்தில் (பூச) புஷ்ய நட்சத்ரத்தில் தேன் அபிஷேகம் செய்க. மஹாஹவிஸ் நிவேதனம் செய்து ஸ்வாமி திருவீதியுலா செய்ய வேண்டும்.

16. முன் கூறியபடி செய்தால் கர்தா விரும்பிய பயனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் மார்கழிமாத, தை மாத பூஜைமுறையாகிய ஒன்பதாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar