Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » தேவீ ஸ்தாபன விதி
படலம் 44: தேவீ ஸ்தாபன விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
03:06

44வது படலத்தில் தேவீஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் தேவியின் ஸ்தாபனம் லக்ஷண முறைப்படி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு பிம்பத்தை சிலை முதலான திரவ்யங்களால் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு கிராமம் முதலிய இடங்களிலோ சிவாலயத்திலோ, தேவீ ஸ்தாபனத்திற்கு உபயோகமான ஸ்தானங்கள் கூறப்படுகின்றன. பிறகு தேவியின் ஆலய நிர்மாண முறை கூறப்படுகிறது. பிறகு உருண்டை வடிவமாகவோ, நீண்ட வட்ட வடிவமாகவோ, சபையை போன்றோ, கோபுரத்துடன் போன்றதாகவோ ஆலயம் நிர்மாணிக்கவும். பிறகு ஆலயத்தில் கர்பக்கிரஹ சுவர் செய்யும் முறை, இரண்டு தளம் முதலான வாசல், இடைவெளி அமைப்பு உள்ள சுவர்களை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் திக் தேவதை அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. தேவியின் வாஹனம் சிம்மத்தையோ விருஷபத்தையோ பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆலயபிரதிஷ்டையில் ஆலய சுவற்றின் தேவர்களின் எல்லா பிம்பங்களையும் பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தேவி ஆலயத்தில் பிரகாரங்கள், பரிவார மண்டபங்கள் செய்யவும் என கூறி பரிவார விஷயத்தில் பலமுறை கூறப்படுகின்றது. பிறகு தேவியின் நிர்மால்ய தாரி என்கிற அசநீ தேவியை குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாபீடத்தில் விசேஷமாக எல்லா அப்சர ஸ்திரீகளும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பிறகு தேவியின் லக்ஷணம் விளக்கப்படுகிறது. பிறகு தேவியின் அளவு லிங்கத்தை அனுசரித்து அமைக்கவும் என கூறி அதில் அளவு முறை கூறப்படுகிறது. பிறகு தேவீ ஸ்வதந்திரமாக இருந்தால் தன்னுடைய ஆலய அளவினாலோ அல்லது அங்குல அளவினாலோ செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஆத்மார்த்த பூஜையில் வேறு அளவு கூறப்படுகிறது. பிறகு தேவியின் அமைப்பை கூறும் விஷயத்தில் பல முறைகள் வர்ணிக்கப்படுகின்றன.

இங்கு ஒரு முகம், நான்கு கை, மூன்று கண், ஒரு முகம், இரண்டு கை, இரண்டு கண், ஒரு முகம், ஆறு கை, ஐந்து முகம், பத்து கை என்று நான்கு விதங்களாக ஆயுதத்துடன் விளக்கப்படுகின்றன. பிறகு தேவி ஈஸ்வரனுடன் சேர்ந்ததாகவோ அல்லது தனியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தேவி ஸ்வாமிக்கு கூறப்பட்ட அஸ்திரம் ஆசனம் இவைகளை உடையதாகவோ தேவனை ஆலிங்கனத்தில் ஈடுபட்டுள்ளதாகவோ ஸ்வாமியின் துடையில் அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோ, அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தேவியை அமைக்கும் விஷயத்தில் சூத்திர பாதமுறை கூறப்படுகிறது. பிறகு பிம்பங்களின் விஷயத்தில் உயர அளவு முறை கூறப்படுகிறது. தேவிக்கு மனோன்மனீ, கவுரி இரண்டு பெயர் கூறி அவர்கள் விஷயத்தில் லக்ஷண பேதம் இல்லை என்கிறார். சதாசிவன் விஷயத்தில் தேவி பிம்பம் அமைக்கப்பட்டால் அது மனோன்மணி என்று தேவியின் பெயர் ஆகும். நடராஜமூர்த்தி ஆகிய மூர்த்தி விஷயத்தில் கவுரி என்று பெயர் கூறப்படுகிறது. தேவியின் பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் மனோன்மணி, கவுரி விஷயத்தில் மூலமந்திரம் கூறப்படுகிறது. முன்பு கூறியபடி பிரதிஷ்டா காலத்தை அறிந்து பிம்பத்தை மண்டபத்தில் உள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபித்து செய்ய வேண்டிய ரத்னநியாச முறை, நயனோன்மீலம் மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய பூஜை, சில்பி பூஜையும் யஜமானனால் செய்யப்பட்டு ஆசார்யன் மண் முதலியவைகளால் பிம்பசுத்தி செய்து, கிராமப் பிரதட்சிணம் செய்து பிம்பத்தை ஜல கரைக்கு எடுத்துச் சென்று ஜலாதி வாசம் செய்யவும் என ஜலாதி வாச முறை குறிப்பிடப்படுகிறது. ஜலாதி வாச முறையில் பிம்பத்தை சுற்றிலும் வாமா முதலான சிக்திகளுடன் கூடிய கும்பங்களை ஸ்தாபிக்கவும் பிறகு சயனாதி வாசத்திற்கு மண்டப முறை சொல்லப்படுகிறது. பின்பு சில்பியைதிருப்தி செய்வித்த பிறகு பிராம்மண போஜனம், பசுஞ்சாணத்தால் மெழுகிடுதல், புண்யாஹ பிரோசிணம் வாஸ்த்து ஹோமம் செய்து மண்டபத்தில் வேதிகையில் ஸ்தண்டிலத்தில் சயனம் அமைக்கவும் என்று பூஜை முறை கூறப்படுகிறது.

பிறகு ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து, முன்பு போல் ஸ்நபனாபிஷேகம் ரக்ஷõபந்தனம் முடித்து தேவியை, கிழக்கில் தலைவைத்ததாக சயனஸ்தாபனம் செய்யவும் என்று சயன அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சிவப்பு வஸ்திரத்தால் போர்த்தி சந்தனம், இவைகளால் பூஜிக்கவும், பிறகு தேவியின் சிரோபாகத்தில் பிரதான கடத்தை பிம்பலக்ஷண முறைப்படி பூஜிக்கவும். சந்தனாதிகளால் பூஜிக்கவும். அந்த கும்பத்தை சுற்றி எட்டு கடங்களை வாமாதி சக்திகளால் பூஜிக்கப்பட்டதாக ஸ்தாபித்து கந்தனாதிகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாச முறை விளக்கப்படுகிறது. அங்கு தத்வதத்வேஸ்வரி, மூர்த்தி, மூர்த்தீஸ்வரி, நியாஸம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் ஹோமகர்மாவை ஆரம்பிக்கவும் என கூறி ஹோமமுறை, திரவ்ய நிரூபணம் செய்யும் விதமாகவும் மந்திரத்துடன் கூடியதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஹோம காலத்தில் வேதாத்யயனம் நான்கு திக்குகளிலும், ஆக்னேயாதி கோணங்களில் மந்திர ஜபங்கள் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி முன்பு போல் கும்பத்தையும் பூஜித்து தேவியை எடுத்து ஆலயம் நுழைந்து ரத்னம் முதலியவைகளால் நிரம்பிய பிரம்மசிலையில் மூலமந்திரத்தை கூறி ஸ்தாபிக்கவும் பிறகு நல்ல முகூர்த்த லக்னத்தில் மந்திரந் நியாசம் செய்யவும். தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யவும். முடிவில் ஸ்நபனம், அதிகமாக நைவேத்யம் உத்ஸவம் முதலியவைகளை செய்யவும். பலவித ஸ்தோத்திரங்களால் நமஸ்கரித்து சந்திரனும் சூர்யனும் பூமியில் உள்ளவரை உங்களால், ஹே தேவி இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தை படிக்கவும் என்று கூறப்படுகிறது. ஆசார்யன் முதலானவர்களுக்கு லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ள தட்சிணையை யஜமானன் கொடுக்க வேண்டும், நான்காவது கர்மாவை அறிந்த தேசிகன் கல்யாண கர்மாவை செய்யவும் என்று பிரதிஷ்டாவிதியில் பூஜை வரிசை கூறப்படுகிறது. இங்கு சலபிம்ப பக்ஷத்தில் அந்த பிம்பத்தை ஸ்நான வேதிகையிலேயே வைக்க அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்வதந்திரமானதும் ஸ்வாமியுடன் உள்ளதாகவும் இருக்கும் தேவியின் விஷயத்தில் கல்யாண கர்மா செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு தேவிபிரதிஷ்டையின் முறை, பயன் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு தேவியின் நித்யார்ச்சனை முதலியவைகள் கூறப்படுகிறது.

நித்யானுஷ்டானம் முடித்த ஆசார்யனுக்கு துவாரம், துவார பாலகர்பூஜை முன்னதாக தேவியின் ஆலயம் நுழையும் வரை விதிகள் கூறப்படுகிறது. பிறகு துவார பாலகர், துவார சக்தி இவைகளின் லக்ஷணம் இவைகளை குறிப்பிட்டு ஸ்வாமிக்கு கூறப்பட்ட துவார பாலகர்களையோ பூஜிக்கவும் என கூறப்படுகிறது. கதவின் வலது இடது, பாகத்தில் விமலன், சுபாகு இவர்களை பூஜித்து கர்பக்கிரஹ பிரவேசம் கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி முறை வர்ணிக்கப்படுகிறது. ஐந்து முகத்தை உடைய தேவியின் பூஜா விஷயத்தில் அஷ்டத் திரிம்சத்கலான் நியாம், பிரணவத்துடன் கூடியதாக செய்யவும். பிறகு ஒரு முகத்தை உடைய அம்பாளின் பூஜை விஷயத்தில் சசிநீ முதலான 31 கலான் நியாசத்தை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அந்தர்யாக முறையும் கூறப்படுகிறது. பிறகு ஸ்தான சுத்தி, திரவ்யசுத்தி, மந்திரசுத்தி முறையும் கூறப்படுகின்றன. பிறகு பிம்பசுத்தி முறை கூறப்படுகின்றன. பிறகு உலோக பிம்பம் சுதாபிம்பம், சித்ர பிம்ப விஷயத்தில் விசேஷ முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசன மூர்த்தியையும் ஆவாஹனம் முதலிய பத்து சமஸ்காரம் செய்யும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பின்பு தூப தீப நைவேத்யம் கொடுக்கும் முறை கூறப்படுகிறது. ஆவரண அர்ச்சன முறையும் கூறப்படுகிறது. கர்ப ஆவரணம் கணங்களின் பூஜை லோகபால பூஜை, அஸ்திரங்கள் முதலியன ஆவரணங்கள் ஆகும் என்று பஞ்சாவரண பூஜை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பாவரணம் தென்கிழக்கு மூலையில் ஹ்ருதயத்தையும் ஈசான திசையில் சிரசையும் நிருதி திக்கில் சிகையையும், வாயு திக்கில் கவசத்தையும் மற்ற நான்கு திக்கில் அஸ்திரத்தையும் பூஜிக்கவும். அல்லது வாமாதி அஷ்ட சக்திகளை கிழக்கு முதலான திக்குகளில் பூஜிக்கவும்.

பிறகு மறுபடியும் மந்திர படனங்கள் நைவேத்யம் பலி ஹோமம் செய்யவும் என்று கிரியையின் வரிசை குறிப்பிடப் படுகின்றது. பிறகு நித்யோத்ஸவம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. நித்யோத் ஸவத்திற்காக பிம்பம் அமைக்கும் முறை லக்ஷணத்துடன் கூடியதாக கூறப்படுகிறது. தேவிக்கு ஒரு காலமோ இரண்டு காலமோ, மூன்று நான்கு, ஏழு, எட்டு காலமோ அல்லது எப்பொழுதுமோ பூஜை செய்யவும் என்று கூறப்படுகிறது. பிறகு வர்÷ஷாத்ஸவம் ஸ்னபநம் தமனாரோஹணம், பவித்ரோத்ஸவம், கிருத்திகா தீபம், ஸம்வத்ஸரோத்ஸவம் வஸந்தோத்ஸவம், டோலோத்ஸவம், மாஸோத்ஸவம், நவநைவேத்யம் ஆடிபூரகர்மா, முதலிய விதிகள், முறைப்படி அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் சிம்மமோ, விருஷபமோ வரையவும் பூரம் என்கிற பூர்வ பல்குனி நட்சத்திரத்தில் தீர்த்த கர்மா செய்யவும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் தேவிக்கு உத்ஸவம் செய்யவும். தேவியின் உத்ஸவ விஷயத்தில், சக்கர அஸ்திர தேவி அஸ்திரம் இவைகளோ ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ளபடி உத்ஸவ பிம்பம் அமைக்கவும். ரக்ஷõ பந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்திற்கு வெளியில் யாத்திரை செய்யக்கூடாது என்று என்பதான விஷயங்கள் கூறப்படுகின்றன. ஜீர்ணோத்தாரணம், பிராயச்சித்த விதி இவைகள் முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு தேவியின் பிரதிஷ்டா பாலாலயத்துடன் கூடியதாகவோ இல்லாததாகவோ இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. முடிவில் தேவியால் அனுக்கிரகிக்கப்பட்ட அரசனுக்கு சர்வ வல்லமை தன்மை ஏற்படும் ஆகையால் தேவியின் முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்யவும். இவ்வாறு 44வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தேவியின் பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறையை உடையதாக கூறுகிறேன். கற்சிலை முதலான பொருள்களை சேகரித்து அவைகளால் பிம்ப உருவத்தை அமைக்க வேண்டும்.

2. கிராமம் முதலிய இடங்களிலும் சிவாலயத்திலும் எட்டுத் திசைகளிலும் அதனிடைவெளியிலும் அழகான விருப்பமுள்ள இடத்திலும் கவுரி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

3. மூன்று முழ அளவு முதல் ஐம்பது முழ அளவு வரை அகல நீள பரப்பளவு உடையதாகவும், உயர அளவுகளை முன்புள்ள அளவுப்படியுமாகவுள்ளதாகி தேவி ஆலயத்தை அமைக்க வேண்டும்.

4. குறுக்கு வட்ட வடிவமாகவோ, உகந்ததான அமைப்புள்ளதாகவும் அமைக்கவும். வட்ட வடிவமாக இருப்பின் உயரத்தை நான்கு பங்காக்க வேண்டும்.

5. கன அளவு, ஓர் அம்ச அதிகரிப்பாலும் ஆறுபாக அளவுகளால் கர்பக்ருஹம் அமைக்கவும். ஓர் அம்ச அளவு சுவர் என்பதாகவும், உயரத்தை மூன்று பாகமாகவோ பிரிக்க வேண்டும்.

6. இரண்டு பாக அளவினால் கர்பக்ருஹமும், ஓர் பாக அளவினால் சுவற்றையும் ஏற்படுத்தவும். நான்காக பிரிக்கப்பட்ட அகல அளவில் ஆறுபாக அளவிலோ கன அளவை அமைக்க வேண்டும்.

7. கர்பக்ருஹம் எட்டு பதங்களானதாக கூறப்பட்டு வேறொரு முறையும் கூறப்படுகிறது. பரப்பளவில் ஐந்தாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஆறு பங்குகளாலோ

8. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து பங்குகளாலோ கர்பக்ருஹம் சுற்றிலும் மீதமுள்ள ஓர் பாக அளவினால் சுவரும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

9. ஆறாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஓர் பாக முதலான அதிகரிப்பால் இரண்டு மடங்கு அளவினால் கர்பக்ருஹம், சுவற்றின் நீளம் முன்புள்ளபடி அமைத்துக் கொள்ள வேண்டும்.

10. பரப்பளவில் இவ்வாறாக இருபது பாக அளவாக கூறப்பட்டதில் அதனதன் இரண்டு மடங்கு அளவு வரை உயர அகல அளவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

11. இரண்டு தளமுதலான தளங்களையுடைய கோபுர வகை தளத்தில் பல எண்ணிக்கையால் இடைவெளி அழகையும், சுவரையும், கால்பாகம், அரை பாகம், முக்கால் பாக அளவுச் சுற்றாகவும்

12. ஒன்றரை பாகம், ஒன்றே முக்கால், இரண்டு பாக அளவினாலே செய்து கொள்ளவும். இடைவெளிச் சுவரை விட்டு வெளிப்பாகத்தினால் கனமாகவோ எல்லா பாகத்தையும் அமைக்க வேண்டும்.

13. அதிஷ்டானம் முதலான ஆறுவர்கங்களை முன்புள்ள அளவுப்படி செய்யவும். பிரகார மண்டபம் போல் ஸபையைப் போல் கோபுர அமைப்புடன் கூடியதுமாகவோ அமைக்க வேண்டும்.

14. கோபுரத்தின் மேலுள்ள ஸ்தூபியின் எண்ணிக்கை ஒன்று முதல் பதினொன்று வரையிலும் ஆகும். திக்தேவதைகளின் விஷயங்கள் தேவியின் ரூபமாற்றங்களை உள்ளதாக கூறப்படுகின்றன.

15. தேவி விமானத்தில் சிவாலயத்தின் தேவதைகளையோ வினாயகர், முருகனையோ தென் கிழக்கு முதலான திசைகளினால் ஸிம்மம் அல்லது வ்ருஷபத்தை வாஹநமாகவோ

16. கோணங்களில் கிளியையோ அமைத்து மற்ற உருவங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்கவும். தேவியானவள் கிழக்கு, மேற்கு, தெற்கு முக அமைப்புள்ளதாகவோ

17. வடக்கு முகமாகவோ அமைக்கலாம். எல்லாதிசை முக அமைப்புகளும் எல்லா ஸம்பத்துக்களையும் கொடுக்க வல்லதாகும். கர்பக்ருஹ அமைப்பின்படி செய்யப்பட்டால் அதன் அளவு விசேஷமாக கூறப்படுகிறது.

18. பிம்ப உருவ இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆயாமம் என்ற கணக்களவை எடுத்து கொள்ளவும். ஆலயத்தில் திக்தேவதைகளை பெண் உருவமுள்ளதாக அமைக்க வேண்டும்.

19. த்வரதசாந்த தளம் என்ற அமைப்புள்ள இடத்தில் ருத்ரன், முருகன், வினாயகர் ஆகிய உருவங்களையும் விமான மூலைகளில் விருஷபத்தையே சிம்மத்தையோ அமைக்க வேண்டும்.

20. மற்ற எல்லா விதமான கர்பக்ருஹ சுவற்றின் தேவதைகளுடைய பிரதிஷ்டை பரமேஸ்வரனின் ஆலயப்ரதிஷ்டையில் கூறப்பட்டுள்ளது.

21. இறைவனின் திருவிளையாடல்களை குறிக்கும் பிரதிஷ்டை கூறப்படவில்லை. திருச்சுற்றுப் பகுதிகள் பரிவார தேவதைகளையும், அவைகளின் மண்டபங்களையும் அமைக்க வேண்டும்.

22. வாமை முதலான சக்திகளையோ பரிவாரத்தில் இருக்கும்படி அமைக்கவும். லக்ஷ்மீ, துர்க்கா, பூமாதேவி. சசினீ, காயத்ரி, உஷா இவர்களையும் அவ்வாறே

23. ஸந்த்யை, ஸரஸ்வதி ஆகிய தேவதைகளையோ பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். ப்ரக்ஞை, மேதா, ஸ்ருதி. ஸ்வாஹா, வஷட் இவர்களும்

24. த்ருதி, மதி ஆகிய தேவிகள் கிழக்கு முதலான திசைகளில் வரிசைக்கிரமமாக கூறப்பட்டுள்ளன அல்லது ஜ்யேஷ்டா தேவியுடன் கூடிய ஸப்த மாத்ருக்களையும் பிரதிஷ்டை செய்யலாமென கூறப்பட்டுள்ளது.

25. தேஹளீ, பேஷணீ, சுல்லி, கண்டநா, உலூகலீ, முஸலீ, முத்கரீ, வாத்மாநீ, ஆகிய எட்டு தேவதைகளையுமோ பரிவார தேவதைகளாகவும் செய்யலாம்.

26. மேற்கூறிய தேவதைகள் நான்கு கைகளையுடையவர்களாகவும், அவைகளில் விருப்பப்பட்ட ஆயுதங்களையோ, தாமரையை தரித்தவர்களாகவோ அமைக்கவும். வ்ருஷபம், வினாயகர், முருகன் மஹாசாஸ்தா குபேரன்.

27. வீரன், பைரவன், சூர்யன் இவர்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென் மேற்கு அல்லது தென் கிழக்கிலே வினாயகரை ஸ்தாபிக்கவும்.

28. கிழக்கு முதலான திசைகளில் இந்திரன் முதலான திக்பாலர்களையோ வஜ்ரம் முதலான தசாயுதங்களையோ ப்ரதிஷ்டை செய்து வடகிழக்கு திசையில் அசநீ என்ற நிர்மால்யத்தை தரிக்கும் சண்டிகேஸ்வரியை ஸ்தாபிக்க வேண்டும்.

29. முன்பு கூறப்பட்ட பரிவார தேவதைகளையோ ஸ்தாபிக்கவும். மஹாபலிபீடத்தில் விசேஷமாக எல்லா அப்ஸர தேவதைகளும் இருக்கிறார்கள்.

30. சிவலிங்க அளவை அனுசரித்து தேவியின் அளவு மூன்று அளவாக கூறப்பட்டுள்ளது. பூஜைக்குத் தக்கதான அளவையோ, இரண்டு பாகமோ, மூன்று பாகமாகவோ

31. நான்கு பாகம், ஐந்து பங்கு அளவாகவோ, பூஜையின் அம்ச பாகத்திலிருந்து மேற்பட்ட முக்கால் பாகம், பாதி பாகம், அதற்கு மேற்பட்ட எட்டில் ஓர் பங்காகவோ ஒன்பதில் ஓர் பங்காகவோ அமைக்க வேண்டும்.

32. பூஜையின் அம்சருத்ர பாகத்திற்கு மேல் நூற்று இருபத்தி நான்கு பங்காகவோ பிரித்து, புருவம், கண், வாய், காது பாகம் வரையிலும் தோள் பாகம், கையின்மேல் பாக இடைவெளி, மார்பகம் வரையிலும்,

33. நிஷ்களம் என்ற அமைப்புள்ள தேவியின் உருவ அமைப்பை லிங்கத்தின் அளவை அனுசரித்து செய்யவும். சிவமூர்த்த பிம்பத்தை அனுசரித்து தேவிமானமும் கூறப்பட்டுள்ளது.

34. தேவியானவள் தானே பிரதானமாக இருக்குமாயின் அதன் கோயில் அளவு முறைப்படி செய்யவும். அந்த அளவும் முன்னமே கூறப்பட்டுள்ளது. மானாங்குல அளவினாலோ

35. செய்து, வீட்டில் ஆன்மார்த்த பூஜைக்கு மாத்ராங்குல அளவினாலோ, அமைக்கவும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ள அளவுப்படி தேவியை அமைக்க வேண்டும்.

36. நான்குகை, மூன்று கண், மிகவும் மலர்ந்த ஓர் முகமும், வெண்பட்டையணிந்தவளாயும், கரண்ட மென்கிற அமைப்புடைய கிரீடத்தையுடையவளாகவும்

37. வரதம், அபயம், பாசம், அங்குசமிவைகளை கையிலுடையவளாகவும் அமைக்கவும். இரண்டுகை, இரண்டுகண் இவைகளையுடனுமோ தொங்குகின்ற கையுடனும்

38. தாமரையைக் கையிலுடையவளாயும் மிகவும் அமைதியாயுடையவளாயும் பொன்னிறமாய் உடையவளாயும் உள்ளதாகவோ தேவி கிளியையும் ஆம்பல் புஷ்பத்தை உடையவளாயுமோ சூலம், பாசமிவைகளை உடையவளாயுமோ

39. விரும்பிய ஆயுதத்தை உடையவளாகவோ, ஆறு கையுடன் உடையவள் சங்கம், சக்ரம் இவைகளையுடையவளாகவோ அமைக்கலாம். ஐந்து முகமாயும் தித்திப்பல்லால் பயங்கரமான முகமும் பத்து கைகள் உடையவளாயும்

40. ஸ்வாமிக்கு கூறப்பட்ட ஆயுதங்களையும் ஆஸனத்தையும் உடையவளாகவோ ஸ்வாமியை ஆலிங்கனம் செய்வளாகவோ, ஸ்வாமியின் மடியில் அமர்ந்தவளாகவோ, நின்ற திருக்கோலம், அமர்ந்த கோலமுடையவளாகவோ

41. தொங்குகிற இடதுகால் அல்லது வலதுகால் இவைகளை உடையவளாகவோ, ஸ்வாமியுடன் கூடியவளாகவோ, தனித்திருப்பவளாகவோ கூறப்பட்டுள்ளன.

42. கருப்பு, வெள்ளை, சிகப்பு முதலிய நிறமுடையதாகவோ, ஸாதகனின் விருப்பமுள்ள வடிவமுடையதாகவோ நிமிர்ந்த தோற்றமுடையவளாகவோ த்விபங்கம் என்ற அமைப்புடன் கூடியதாகவோ

43. மூக்கின் நுனியில் சூத்ரத்தை தொங்கவிட்டு வலதுகால் நின்ற கோலமான இடத்தில் நுதிகால் நடுவில் உள்ள நூல்கோடு சிவசூத்ரமொன்று கூறப்பட்டுள்ளது.

44. அந்த சூத்ரத்திலிருந்து இடது பாகத்திலுள்ள மார்பக மத்ய தேசம் வரை மூன்றங்குலமும், அதே சூத்ரம் தொப்பூழ் நடுபாகம் வரை உள்ளவையாக இருப்பது ஓரங்குலமெனப்படும்.

45. சிவசூத்திரம், ஸ்தன மத்ய சூத்ரமிரண்டின் இடைவெளி நான்கு மாத்ரராங்குலமாகும். சிவசூத்ரம், முழந்தாள் சூத்ரமிரண்டின் இடைவெளி மூன்றங்குலம் எனப்படும்.

46. பாதங்களிரண்டின் கட்டை விரலுடைய இடைவெளி ஏழரை அங்குலமும் ஆகும். அந்த ஏழங்குலத்தின் மூன்று பாகமோ, ஓர் பாகமோ, குதிகால்களின் இடைவெளியாகும்.

47. கடக ஹஸ்திரத்தின் நுனிஉயரம் மார்பக நுனிக்கு ஸமமாகும். தொப்பூழ் பாகத்திலிருந்து மணிக்கட்டு வரை உள்ள இடைவெளி ஏழரை அங்குல அளவாகும்.

48. பக்கவாட்டுக்கை உள்ளடங்கிய நடுஇரண்டு கையின் இடைவெளி ஏழங்குலம் ஆகும். தொங்கும் கையின் நுனியிலிருந்து துடையின் நுனி ஆறங்குல அளவாகும்.

49. முழந்தாள் மூட்டிலிருந்து மணிக்கட்டு பாகம் வரையிலுள்ள இடைவெளி நான்கு அங்குலமாகும். பக்கவாட்டுக் கை, மத்யமக்கைகளின் இடைவெளி ஆறங்குலமாகவும் இருக்கலாம்.

50. கூறப்பட்டுள்ள சூத்ர கணக்கு எடுத்துக் காட்டுக்காகவேயாம். சூத்திரத்தில் நியமமில்லை. தன்னிச்சையான ஆலய தேவியின் இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது.

51. மூலஸ்தான தேவியின் அளவு முறை முன்னமே கூறப்பட்டுள்ளது. உத்ஸவ மூர்த்தி தேவி பிம்பங்களின் அளவு மூலஸ்தான பிம்பத்தின் அளவேயாம்.

52. மூலாலய லிங்க அளவுப்படியே மூலஸ்தான தேவியின் அளவுப்படியோ அமைக்கவும். சரீர உருப்புக்களின் அளவு முழந்தாள், துடைபாக அளவு ஸமமாகவோ செய்யவும்.

53. இவ்வாறு தேவியை அமைத்து, அதன் பெயர் இருவிதமாக அறியவும். மனோன்மணீ என்றும் கவுரி என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் உருவ அமைப்பில் மாற்றமில்லை.

54. ஸதாசிவ மூர்த்தமான லிங்கம் எங்கு நிர்மாணிக்கப்பட்டு தேவி அமைக்கப்படுகிறதோ அப்பொழுது மனோன்மணா என்ற பெயரை தேவீ அடைகின்றான்.

55. நிருத்த (நடராஜ) மூர்த்தி முதலான உத்ஸவ மூர்த்தி பேதங்களில் கவுரி முதலான பெயரை அடைகிறாள். நல்ல உருவ அமைப்புடன் கூடியதாக தேவியை அமைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

56. ஸாந்தமென்கிற ஹ, ரேபம் ர, மஹாமாயா ஈ, பிந்து நாதம் இரைகளுடன் சேர்ந்ததான ஹ்ரீம் என்றும் மனோன்மணீயின் பீஜமந்திரம் ஹ என்ற எழுத்து இருக்குமிடத்தில் க வின் முடிவான சேர்ந்ததாகவும்

57. க்ரீம் என்பதானது கவுரி மந்திரமாகும். மேற்கூறியவைகள் விஸர்கத்துடன் கூடியதாகவும், என்றிருக்கலாம். வ என்பதற்கு முடிவான ச வும் ரேபமான ர வும் மாயையாகிய ஈ யும், ஸ்ரீம் விஷ்ணு மந்திரமான ஹ்ரீம் கூடிய மந்திரம்

58. எட்டாவது வர்க்கமென்ற ச ச்வர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஸ வும், நான்காவது உயிரெழுத்தான ஈ யும், பிந்து நாதத்தன்மை உள்ளதாக இருப்பது தேவீ பீஜமாகும். (ஸீம்)

59. ஐம், க்லீம், சவும் என்பதாகவும், ஹம்ஸபீஜ மான ஹ வும், பிந்து நாதத்துடன் கூடியதாகவும், ஸ்ரீம் என்பதாகவுமோ தேவி பீஜத்தை அறிய வேண்டும்.

60. இவ்வாறு நான்கு பீஜ மந்திரம், தேவிக்கு பொதுவானதாகும். இவ்வாறாக மூலமந்திரம் கூறப்பட்டுள்ளது. அதில் பிரம்ம மந்திரம் அங்க மந்திரங்களை கல்பிக்க வேண்டும்.

61. ஹ்ருதய மந்திரத்திற்குட்பட்ட, ஜாதி பீஜம், மூலமந்திரம் இவைகளும் முறையே மூர்த்தி மந்திரம், வித்யாதேஹ மந்திரமாக கூறப்பட்டுள்ளது. ஆதி சக்தியின் மந்திரமாக ஹ்ரீம்முமோ மூலமந்திரமாக ஆகும்.

62. இவ்வாறாக மந்திரம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை கூறப்பட்டது. பிரதிஷ்டையின் நேரமும், அங்குரார்ப்பணமும் முன்புள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

63. மண்டபத்திலுள்ள ஸ்தண்டிலத்தில் கிழக்கு முகமாக தேவியை ஸ்தாபிக்கவும். தேவியின் பீடத்தில் மத்தியில் தங்கம், கிழக்கில் இந்த்ர நீலக்கல், முறைப்படி

64. வைடூர்யம், பவழம், முத்து, வைரம், புஷ்பராகம், கோமேதகம், மரகதம் இவைகளை ரத்னந்யாஸம் முறையாக

65. ஹ்ருதய மந்திரத்தினாலும் வாமை முதலான மந்திரங்களினாலோ வைக்கவும். அல்லது எல்லா இடத்திலும் தங்கத்தையோ வைக்கவும். நயனோந் மீலத்தை தங்கத்தினாலான நகத்தினால் செய்ய வேண்டும்.

66. தேன் முதலிய திரவ்யங்களால் பிம்பங்களுக்கு திரையிடப்பட்டவாறு கண் திறக்கவும். பசு, பிராமணர்கள், தான்யம், மனிதர்கள் இவர்களை பிம்பத்திற்கு காட்டுவதையும் முன்பு போல் செய்து

67. ஆசார்யனையும் சில்பியையும் பூஜித்து விட்டு, மண் முதலான பொருட்களால் பிம்ப சுத்தி செய்து கிராம பிரதட்சிணமும் ஜலாதி வாஸமும் செய்ய வேண்டும்.

68. பிம்பத்தை சுற்றிலும் கலசங்களை வாமை முதலான தேவியர்களை பூஜித்ததாகி வைக்க, ஆலயத்தின் நான்கு திசையிலுமோ, தென் கிழக்கு வடகிழக்கு திசையிலோ மண்டபங்களை அமைத்து

69. அதில் யோநி வடிவமாக ஒன்பது, ஐந்து, ஒன்று ஆகியவைகளை மந்திர எண்ணிக்கைகளுக்கு அடிப்படையாக குண்டம் அமைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் அழகாக முன்புபோல் ஸ்னான வேதிகையை அமைக்க வேண்டும்.

70. யாகசாலை அமைத்து சில்பியை த்ருப்தி செய்வித்து, அந்தணர்களுக்கு உணவளித்து, பசுஞ்சாணமெழுகிட்டு, புண்யாஹவாசனமும், வாஸ்து சாந்தியும் செயற்பாலது.

71. வாஸ்து ஹோமம் செய்து, வேதிகையின் மேல் ஸ்தண்டிலத்தில் முன்பு கூறப்பட்டுள்ளபடி சயனத்தை அமைக்க வேண்டும். தேவீ பிம்பத்தை ஜலத்திலிருந்து எடுத்து முன்பு கூறப்பட்டபடி ஸ்நபநம் செய்விக்க வேண்டும்.

72. சந்தனம் புஷ்பமிவைகளால் தேவி பிம்பத்தை பூஜித்து ஹ்ருதிய மந்திரத்தினால் ரக்ஷõபந்தனம் செய்விக்கவும். கிழக்கில் தேவியின் தலை உள்ளதாக சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

73. சயன பிம்பத்தை சிகப்புத் துணியால் போர்த்தி சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும். தேவியின் சிரோதேசத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

74. உருவ அமைப்பு முறையாக பிம்பத்தை தியானித்து சந்தனமிவைகளால் பூஜிக்கவும். பிம்பத்தை சுற்றிலும் எட்டு கடங்களை ஸ்தாபித்து வாமை முதலியோர்களை பூஜிக்க வேண்டும்.

75. அந்த எட்டு கடகங்களை வஸ்திரம் தங்கமிவைகளுடன் கூடியதாக ஸ்தாபிக்க வேண்டும். ஆத்மதத்வ, வித்யாதத்வ, சிவதத்துவங்களை முழந்தாள், கழுத்து, சிரோபாகம் வரையிலாக பூஜிக்க வேண்டும்.

76. மேற்கூறிய தத்வங்களை மாயாதத்வ, ஸதாசிவதத்வ, சக்தி தத்வம் வரை வியாபித்திருப்பதாக நியாஸிக்கவும். ஆத்மாதிதத்வாதீச்வரியாக கிரியை, க்ஞான, இச்சா சக்திகள் கூறப்பட்டுள்ளன.

77. தாரிகை, தீப்திமதி, அத்யுக்ரா, ஜ்யோத்ஸ்நா, சேதா, பலோத்கடா, தாத்ரீ விப்வீ என்பதான மூர்த்திச்வரிகளோடு கூடியதாக மூர்த்திகளை ந்யாஸம் செய்ய வேண்டும்.

78. பஞ்சகுண்டப்படி மூர்த்திகளை ந்யாஸம் செய்யும் விஷயத்தில் வாமை முதலான மூர்த்திபர்கள் கூறப்பட்டுள்ளன. மூர்த்தீஸ்வரிகளை சந்தனம் புஷ்பம் இவைகளாலும் பிறகு நைவேத்யம் வரையிலுமாக முறைப்படி பூஜிக்க வேண்டும்.

79. தேவியின் மூலமந்திரத்தையும் மூர்த்தி மந்திரத்தையும் மந்திர அங்கமந்திரங்களையும் பூஜிக்கவும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோம கார்யத்தை ஆரம்பிக்க வேண்டும்.

80. ஆதிசைவ குலத்திலுண்டானவனும், முன்பு கூறப்பட்ட அமைப்பு முறையுடனுள்ளவனுமான ஆசார்யன், கிழக்கு முதலான திசைகளில் வேதபாராயணமும், தென்கிழக்கு முதலான திசைகளில் மூலமந்திர ஜபங்களையும் செய்ய வேண்டும்.

81. குண்டஸம்ஸ்காரம், அக்னிஸம்ஸ்காரம் செய்து ஸமித் முதலான பொருட்களால் மூர்த்தியை த்ருப்தி செய்விக்கவும். சமித், நெய், அன்னம், பொறி, எள், கடுகு, யவை இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

82. புரசு, அத்தி, இச்சி, ஆல் ஆகிய ஸமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி, பில்வம் ஆகிய ஸமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

83. பிரதான (முக்கியமான) குண்டத்தில் புரசும், மற்றும் புரச ஸமித்தையே எல்லா குண்டங்களிலும் ஹோமம் செய்யவும். ஆயிரம், ஐநூறு, நூற்றியெட்டு ஆவ்ருத்தியாக

84. ஆசார்யன் மூலமந்திரத்தினால் ஹோமம் செய்யவேண்டும். மூர்த்திபர்கள் மேற்கூறிய எண்ணிக்கையளவோ, பாதி எண்ணிக்கையாகவோ ப்ரும்ம மந்திர அங்க மந்திரங்களால் எட்டு திசைகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

85. மூர்த்தி, மூர்த்தீஸ்வரிகளை அந்தந்த குண்டங்களில் ஹோமம் செய்து திருப்திபடுத்த வேண்டும். எல்லா தேவர்களுடன் கூடியதாக முக்யமான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

86. சாந்தி கும்பதீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்து அவரவர்களின் மந்திர ஜபத்தை செய்யவும். தர்பங்களால் தொடும்படி செய்வதை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

87. பிறகு காலையில் மூர்த்திபர்களுடன் கூடிய ஆசார்யன் சுந்தனாக இருந்து தேவியை எழுந்தருளச் செய்து கும்பங்களையும், வஹ்னியையும் முன்போல் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.

88. பூர்ணாஹுதி செய்து ஆலயத்தில் நுழையவும் மானுஷ, தைவிக பிம்ப விஷயத்தில் முன்பு கூறியபடி பூஜை முறைகளை செய்து ஸ்தாபிக்க வேண்டும்.

89. பிரம்ம சிலையை நவரத்ண, ஸ்வர்ணங்களோடு சேர்ந்ததாக பூஜித்து முன்பு போல் ஆலயத்தில் எடுத்துச் சென்று ஈச்வரியை மூலமந்திரத்தை கூறி பீடத்தில் சேர்க்க வேண்டும்.

90. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர நியாஸம் செய்யவும், உற்சவ மூர்த்தி பிம்பமாயிருப்பின் ஸ்னான வேதிகையில் ஸ்தாபித்து மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

91. தேவிக்கு முன்னதாக கடங்களை ஸ்தாபித்து கும்பத்திலிருந்து மந்திரத்தை கிரஹித்து தேவி ஹ்ருதயத்திலும் மற்ற குடங்களிலிருந்து மந்திரங்களை எடுத்து பீடத்தை சுற்றிலும் நியாஸிக்க வேண்டும்.

92. தத்வதத்வேச்வர, மூர்த்தி மூர்த்தீச்வர நியாஸம் முன்பு போல் செய்யவும். அந்தந்த கும்பஜலங்களால் அந்தந்த இடங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

93. ஸ்நபநாபிஷேகத்தை பின்பு செய்வித்து, அதிகமான நைவேத்யத்தையும், உத்ஸவத்தையும் செய்து, பலவித ஸ்தோத்ரங்களால் புகழ்ந்து பாடி கீழ்வரும் ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.

94. எந்த காலம் வரையிலும் சந்திரனும், சூர்யனும் பூமியில் இருக்கிறார்களோ, அந்த காலம் வரை ஹே தேவி உம்மால் இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்.

95. தேசிகர்களை பூஜித்து தட்சிணையை கொடுக்கவும். உத்தம முதலான அமைப்புள்ள தேவியை லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

96. தேவி மட்டும் முக்யமான தெய்வமாயிருப்பின் நான்காம் நாள் கல்யாண உத்ஸவம் செய்யவும். ஸ்வாமியுடன் சேர்ந்திருக்கும் தேவியாயிருப்பின்

97. கல்யாணோத்ஸவத்தை செய்ய வேண்டாம். இவ்வாறாக பிரதிஷ்டை கூறப்பட்டது. இவ்வாறு எந்த மனிதன் செய்கிறானோ அவன் புண்ய கதியை அடைகிறான்.

98. மேற்கூறியபடி எந்த புருஷன் பாவனையோடு பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் தனக்கு விருப்பப்பட்டவைகளை இந்த உலகத்தில் அனுபவித்து முடிவில் சிவபதத்தையாகிறான்.

99. இருபத்தோரு தலைமுறை பித்ருக்களை, முன்னோர்களின் இருப்பிடத்தை அடையச் செய்கிறது. பிறகு தேவியின் நித்யப்படி பூஜையின் முறையை கேளுங்கள்.

100. ஜலமலசுத்தி, ஆசமநம், குளியல், ஸந்த்யாவந்தனம், மந்திரதர்பணம் முதலியவைகளை முன்கூறிய முறைப்படி செய்து ஆலயத்தில் நுழையவும்.

101. கை, கால்களை சுத்தம் செய்து முறைப்படி ஆசமனம் செய்து அங்கந்யாஸம், கரந்யாஸம், ஸாமான்யார்க்கம் செய்முறையும் செய்து

102. வாயிலையும், வாயிற்காப்போர் தேவிகளையும் ஸாமான்யார்க்க ஜலத்தால் பிரோக்ஷித்து வாயிற் படியின் இருபக்கங்களிலும் ஸங்கநிதி, பத்மநிதி இருவர்களை

103. திவார சக்தியாக பூஜித்து, கையில் கத்தி, கேடயம் தரித்திருப்பவர்களாயும், சடாமுடியையுடையவர்களாயும், சிகப்பு கருப்பு நிறமாயும் பயங்கரமாய் உடையவர்களாயும்

104. எல்லா அணிகலன்களையும் எல்லா ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டவளாயும் பூஜித்து, வாயிற் படியின் மேல்பாகத்தில் ஸரஸ்வதியையும், இரண்டு கிளைகளிலும்

105. கங்கையையும், யமுனையையும் பூஜித்து, தேஹளீ பாகத்தில் சக்தியஸ்த்ரத்தையும் அல்லது ஜடாமுடியையுடையவளாக விசாலாக்ஷியை

106. சம்ருத்தியையும், த்ருதியையும் வலது இடது கிளை பாகத்தில் பூஜிக்கவும். ஸரஸ்வதியையும் கங்கையையும் வெண்மை நிறமுடையவர்களாக எண்ணவும்.

107. மற்ற எல்லா தேவதைகளையும் கருப்பு நிறமுள்ளவர்களாயும் எல்லா அணிகலன்களையும் இரண்டு கைகளால் கத்தி, கேடயத்தையும் தரித்தோ, நான்கு கைகளையும் உடையவர்களாகவோ

108. ஸ்வாமிக்காக கூறப்பட்ட திவார தேவதைகளையோ விமலன், ஸூபாஹூவையுமோ கதவுகளிலோ பூஜித்து, வலது அல்லது இடது பக்க வழியாக உள்ளே நுழைய வேண்டும்.

109. வாஸ்து பிரம்மாவை பூஜித்து நல்ல இருக்கையில் வடக்கு முகமாக அமர்ந்து தன்னை சக்தியிடம் சேர்ந்ததாக சேர்த்து முன்பு போல் பூதசுத்தியையும் செய்து

110. ஆத்மாவை அம்ருதத்தால் நனைந்ததாகி செய்து ஆத்மாவை அம்ருதீகரணம் செய்வித்து கரந்யாஸமும், அந்த மந்திரங்களால் சரீரந்யாஸமும் செய்ய வேண்டும்.

111. ஓம்காரத்துடன் அஷ்டத்ரிம்சத்கலா நியாஸத்தை ஐந்து தலை முகமுள்ள தேவியின் பூஜையில் செய்ய வேண்டும்.

112. ஓர் சிரஸ் உள்ள தேவிக்கு ஏகத்ரிம்சத் கலாந்யாஸமென்ற 31 கலைகளின் நியாஸத்தையும் செய்ய வேண்டும். சசினி முதலான கலைகளை மட்டுமே நியாஸம் செய்ய வேண்டும்.

113. அல்லது சிவமந்திரங்களால் சைவ விக்ரஹமாக்கி தேவி, முருகன், வினாயகர் ஆகிய எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

114. ஸகளீகரணம் செய்து கொள்ளப்பட்ட சரீரத்தை உடையவனாகி அந்தர்யாகத்தை செய்யவும். ஹ்ருதயத்தில் தேவி பூஜையையும் தொப்பூழ் பிரதேசத்தை ஹோம பாவனையாயும்

115. நெற்றியில் ஈச்வரியை எல்லோரிடமும் இருப்பவளாகவும் வரத்தை கொடுப்பவளாகவும் தியானிக்கவும். ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் செய்ய வேண்டும்.

116. சந்தனம், புஷ்ப, அக்ஷதையிவைகளுடன் கூடிய பொருள்களை விசேஷார்க்ய ஜலத்தால் சுத்தி செய்து ஆத்மாவை பூஜித்து மந்திர சுத்தியையும் செய்ய வேண்டும்.

117. பின்பு பிம்ப சுத்தி செய்து நிர்மால்ய பூஜையை செய்யவும். கணாம்பிகையை வித்மஹே மஹாதபாயை தீமாஹி என்றும்

118. பிறகு தந்நோ தேவீ பிரசோதயாத் என்பது யாக மந்திரத்தை கூறி அர்ச்சித்து நிவேதனம் செய்யவேண்டும்.

119. நிர்மால்ய பொருட்களை நிர்மால்யத்தை சண்டிகேஸ்வரியிடம் ஸமர்ப்பித்து அல்லது விஜர்ஜனம் செய்தோ, தேவியின் அஸ்திரத்தை கூறி பிம்பசுத்தி செய்யவும்.

120. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகமும், சுண்ணாம்புக்கலவை, சுவற்றுச் சித்திரமாயிருப்பின் பூஜை செய்வதே சுத்தியென்றும் கூறப்படுகிறது. (கர்மாச்சையே)

121. அல்லது அஸ்திர மந்திரங்களால் பனை ஓலை விசிறி காற்றினால் சுத்தி செய்யும். அவ்வாறே அங்கு வாடாத மாலையும் அணையா விளக்கு மேற்படுத்தவும்.

122. தினந்தோறும் பூஜிக்காமல் வருடத்திலோர் முறை பூஜிக்கவும். கற்சிலை வடிவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது கூறப்படுகிறது.

123. நடுவில் ஆஸனத்தை ஏற்படுத்தி ஆதார சக்தியையும், அனந்தன், தர்மன் முதலியோர்களையும் அனந்தன் முதலியவர்களையும்

124. அதச்சதநம், ஊராத்வசதளம், பத்மம், கர்ணிகை, சக்தி மண்டலத்தையும் இச்சை, ஞான, க்ரியை ஆகிய மண்டல சக்திகளோடு கூடிய வாமை முதலான தேவிகளுடன் கூடியதும்

125. பிறகு தேவ்யாஸநாய நம: என்பது முதற்கொண்டு மூர்த்தி உருவத்தை பூஜித்து பஞ்ச ப்ரும்ம நியாஸமும், கலாந்யாஸமும் முன்பு போல் செய்ய வேண்டும்.

126. பூஜைக்காக உள்ள மூர்த்தியின் வித்யா தேஹ அமைப்பை ஏற்படுத்தி பிரணவ மந்திரத்தினால் அந்த பிம்பத்தில் அனுக்ரஹத்தால் தேவியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

127. மூலமந்திரத்தை புஷ்பாஞ்சலியையுள்ள கையையுடையவனாய் ஹ்ருதயத்திலிருந்து வந்ததாக பாவித்து தேவியிடம் ஆவாஹித்து ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

128. ஸன்னிதானம், ஸன்னிரோதனம், அவகுண்டமிவை ஹ்ருதய மந்திரத்தினால் செய்து ஹ்ருதலம், முதலான மந்திரந்யாஸத்தை செய்து மஹாமுத்ரையை காண்பிக்க வேண்டும்.

129. அர்க்யபாத்ரத்தை வைத்துவிட்டு, ஹ்ருதய மந்திரத்தினால் திருவடியில் பாத்யத்தையும் தத்புருஷ மந்திரத்தினால் முகத்தில் ஆசமனீயமும் ஈசான மந்திரத்தினால் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும்.

130. பாத்யம் முதலிய திரவ்யங்களை முன்பு போலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்து ஸமர்ப்பிக்க வேண்டும். சந்தனம், புஷ்பம் இவைகளுடன் சேர்த்து ஹ்ருதய மந்திரத்தினால் தூபம் கொடுக்க வேண்டும்.

131. பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ பஞ்சாம்ருதம் இன்றியோ அபிஷேகம் செய்விக்கவும். திரு ஒற்றாடை செய்து ஆடை அணிவிக்க வேண்டும்.

132. வாமதேவ மந்திரத்தினால் ஆசமனத்தை சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளுடன் கொடுக்கவும். தீபத்தையும் நைவேத்யத்தையும் மூலமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.

133. ஆமந்திரண ஹவிஸையோ, ஸாமான்ய ஹவிஸையோ நிவேதனம் செய்து பின்பு ஆவரண பூஜையையும் தென்கிழக்கில் ஹ்ருதயத்தையும் பூஜிக்க வேண்டும்.

134. ஈசான திசையில் சிரஸ்ஸையும் தென் மேற்கு திசையில் சிகையையும், வடமேற்கு திசையில் கவசத்தையும் நான்கு திசைகளிலும் அஸ்திரத்தையும் வாமை முதலியோர்களையும் பூஜிக்க வேண்டும்.

135. தேவீகணங்கள், வித்யேசர்கள், திக்பாலர்கள், தசாயுதங்கள் இவர்களைச் சுற்றிலும் பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்பதான ஆவரண பூஜையையோ செய்யவும்.

136. திரும்பவும் தூபம், தீபம், மந்திரம், பாட்டு பாடுதல் இவைகளையுமோ செய்து நைவேத்யம் பலி ஹோமம் முதலியவைகளைச் செய்து நித்யோத்ஸவத்தை செய்யவும்.

137. நித்யோத்ஸவத்திற்காக தேவி அமைக்கப்படவேண்டும். அந்ததேவி ஓர்முகம், நான்கு கை, வரதம், அபயம், சங்கு, சக்கரமிவைகளை தரித்திருப்பவர்களாகவும்

138. தாமரையாஸனத்தில் அமர்ந்திருப்பவளாய் மனோன்மணீயை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம் அக்ஷதைகளால் லிங்கங்களில் முறையே மேதை, ப்ரக்ஞை, உஷை ஆகிய இவர்களை பூஜிக்கவும்.

139. முன்பு கூறப்பட்ட முறைப்படி ஆலயத்தை வலம் வருதலைச் செய்யவும். பாதுகை பூஜையுடன் கூடியோ ஆலயத்தை அடையவும்.

140. தினந்தோறும் செய்ய வேண்டிய திருவிழாவிற்கான பிம்பங்கள் பலவகை இருப்பின், அவைகளில் அந்த ஆலயத்திற்கு ஏற்றவாறு நல்ல அமைப்புள்ள உற்சவ பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

141. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு காலங்களில் ஏதேனும் ஓர் காலமோ தேவியை எப்பொழுதுமோ பூஜிக்க வேண்டும்.

142. எல்லா விருப்பத்தையும் கொடுக்கக் கூடிய நித்யோத்ஸவம் கூறப்பட்டது. உத்ஸவம், ஸ்நபநம், மரிக்கொழுந்து சாற்றும் முறையையும்

143. பவித்ரோத்ஸவம், க்ருத்திகாதீபோத்ஸவம், வருடாந்திர திருவிழாக்கள், வஸந்தோத்ஸவம்

144. அந்தந்த மாதத்தில் மாத உத்ஸவமும், நவநைவேத்யமுறை, விசேஷமாக பூர நக்ஷத்திர திருவிழாவும் பிராயச்சித்தமும் செய்யவேண்டும்.

145. பழுதடைந்ததை புதுப்பித்தல் செய்வதையும் முன்புபோல் செய்யவும். ஆனால் உத்ஸவக் கொடியில் ஸிம்மத்தையோ, வ்ருஷபத்தையோ வரையவும்.

146. விசேஷமாக பூர நக்ஷத்திரத்தில் தீர்த்த வாரியை செய்யவும். தேவிக்கும், சிவோத்ஸவ முறைப்படி தினந்தோறும் திருவிழாவை நடத்தலாம்.

147. கொடியேற்றுதல், ஹோமம், பலியின்றி வீதிவலத்தை மட்டுமோ செய்ய வேண்டும். தேவிக்கு அஸ்திர சக்தியாக சக்ர ரூபஅஸ்திரத்தையோ, த்ரிசூலாஸ்திரத்தையோ அமைக்க வேண்டும்.

148. உத்ஸவ மூர்த்தி பிம்பமானது முன்பு கூறப்பட்ட முறைப்படி செயற்பாலது. ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்தில் வெளியில் வலம் வருதல் கூடாது.

149. எங்கு பலி கொடுக்கப்படுகிறதோ, அங்கு கட்டாயம் வீதிவலம் வருதலை செய்ய வேண்டும். மற்ற இடத்திலேயாவது வீதிவலத்தையும் எல்லாவற்றை ஆலயத்திலேயுமோ செய்ய வேண்டும்.

150. ஒரே பிரகாரமுள்ள ஆலயமாயிருப்பின், பிரகாரத்திற்கு வெளியில் பலி, வீதிவலம் வருதல் உத்தமம். இந்த விதி முறையில் எல்லா தேவர்களுக்கும் பொதுவானதாகும்.

151. ஆலயத்தின் மூர்த்தேஷ்டிகாஸ்தாபனம், ஸ்தூபிஸ்தாபனமிவற்றை முன்பு போல் செய்யவும். எட்டு திசை மூர்த்திகளுடன் கூடியதாகவும், மத்தியில் கும்பத்தையுடையதாகவும் (ஸ்தூபியுடன்)

152. கோபுரஸ்தாபனத்தை முன்பு கூறியுள்ளபடி செய்ய வேண்டும். இந்த தேவியின் பிரதிஷ்டையானது முதன் முதலில் செய்யப்படும் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ செய்ய வேண்டும்.

153. அரசனுக்கு தேவியின் திருவருளால் எல்லா ராஜ்யத்திற்கும் தலைவனாகும் தன்மை ஏற்படுகிறது. ஆகையால் தேவிக்கு முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

154. இவ்வாறாக தேவியின் பிரதிஷ்டை முதலிய க்ரியைகள் நன்கு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேவியை பிரதிஷ்டை செய்யும் முறையாகிற நாற்பத்தி நான்காவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar