Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » அரசர்களின் ரக்ஷ முறை
படலம் 76: அரசர்களின் ரக்ஷõ முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
11:06

76வது படலத்தில், அரசர்களினுடைய ரக்ஷ விதியை கூறுகின்றேன். நல்ல உத்தமமான குருவானவர் அரசனின் பொருட்டு நெற்றி, முகம், ஹ்ருதயம், நாபி, கைகளின் அடி இரண்டிலும் மந்திரத்தை நினைத்துக் கொண்டு விபூதியை கொடுக்க வேண்டும் என்பதைக் கூறி திருநீற்றின் லக்ஷணம், நினைக்க வேண்டிய மந்திரம், திருநீறு கொடுக்க வேண்டிய முறை, அங்கு, விரல்களின் தேவதைகள் என்பன போன்ற விஷயங்களை விளக்கப்படுகின்றன. பிறகு பிராமணன் க்ஷத்திரியர், வைசியர்கள், சூத்ரர்கள் விஷயங்களில் கூட ரøக்ஷயின் முறை, பூணூல் அணியும் முறை மந்திரத்தோடு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசர் விஷயத்தில் உத்தரீயம் இரண்டு பூணூல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரகாரம் எழுபத்து ஆறாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. அரசர்களுக்கான ரøக்ஷயை சுருக்கமாக கூறுகிறேன். சாஸ்திரோக்த முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை வஸ்திர காயம் செய்யப்பட்டு மிருதுவாக இருப்பதும் நல்ல வாசனை உள்ளதும், பஞ்சாக்ஷராகி மந்திரங்களால் ஸம்ஸ்காரம்

2. செய்யப்பட்டதும், கொஞ்சம் சிவந்ததுமான விபூதியை அரசருக்கு, தொப்புளுக்கு மேலும் நெற்றி, முகம், மார்பு, தொப்புள் கைகளின் மூலப்பரதேசங்களிலும்

3. ஈசானாதி மந்திரத்துடன் ஜபித்துக் கொண்டும், அல்லது தனக்கு இஷ்டமான மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டும், ஆசார்யன், பிரம்ம, விஷ்ணு, ருத்ர ஸ்ரூபமான மூன்று நடு விரல்களால் விபூதியை பூசிக்கக் கொடுக்க வேண்டும்.

4. பிரம்மா, விஷ்ணு, ஈச்வரர்களை தியானித்துக் கொண்டு ஈசானாதி மந்திரங்களை ஜபித்துக் கொண்டு, மும்மூர்த்தீஸ்வரூபமான, மோதிர விரலுடன் கூடிய கட்டை விரலால் விபூதியை கொடுக்க வேண்டும்.

5. மோதிர விரலின் அடிபாக பர்வாக்களிலிருந்து, வரிசையாக மூன்றுபர்வாக்களிலும் (கணுக்களிலும்) மூன்று மூர்த்திகள் இருக்கின்றனர். அதற்கேற்றவாறு மந்திரங்களைச் சொல்லி யஜமானுக்கு, ஏற்ற வகையில் விபூதியை கொடுக்க வேண்டும்.

6. நான்கு வர்ணத்தாருக்கும் விபூதி விநியோகம் செய்யும் பொழுது எல்லா மந்திரங்களையும் சொல்லலாம். வேதவித்தான பிராம்ணர்களுக்கு விபூதி தரும் பொழுது ஓம் என்ற பிரணவம் முதல் நம: என்று முடிவு வரையிலாக உச்சரிக்க வேண்டும்.

7. க்ஷத்திரியனுக்கு விபூதி கொடுக்கும் பொழுது ஸ்வாஹா என்ற சொல்லை கடைசியாக கொண்டும், வைச்யனுக்கு வவுஷட் என்ற சொல்லை முடிவாக கொண்டும், நான்காம் வர்ணத்தவர்களுக்கு

8. அவரவர்களின் தேவதைகளை தியானித்துக் கொண்டும் விபூதி கொடுக்கலாம். அவரவர்களின் தேவதைகளின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட பூணூலைக் கொடுக்க வேண்டும்.

9. அரசர்க்கு இஷ்ட தேவதையின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட இரண்டு பூணூல்களை கொடுக்கவும். நல்ல உத்தரீயங்களையும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் அரசனின் ரøக்ஷ முறையாகிய எழுபத்தி ஆறாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar