பதிவு செய்த நாள்
16
ஜன
2022
05:01
சூலூர்: காவடிகள் எடுத்துக்கொண்டு, பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டு சென்றனர்.
முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி, சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து பழனி, சென்னிமலை, சிவன்மலை, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். சோமனூர் அடுத்த தொட்டிபாளையத்தில் இருந்து, 50 க்கும் மேற்பட்ட காவடிகள் எடுத்துக்கொண்டு, ஆண்கள், பெண்கள் என, 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தைப்பூசம் வரை கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை என, அரசு அறிவித்துள்ளது வேதனையளிக்கிறது. தைப்பூச நேர்த்திக்கடனை செலுத்த காவடிகளுடன் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டும் பாதயாத்திரை புறப்பட்டு விட்டோம். எப்படியாவது நேர்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டு வருவோம் என்றனர்.