அப்பன் பெருமாள் கோவிலில் மண்டல பூஜை விழா: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2022 03:01
மானாமதுரை: மானாமதுரை மேட்டுத்தெரு அப்பன் பெருமாள் கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அப்பன் பெருமாள் கோயில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கலசங்களில் புனித நீர் நிரப்பி வைத்து யாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் அப்பன் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியோடு சர்வ அலங்காரங்களுடன் கோயில் வளாகத்தில் எழுந்தருளினார். மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.