கொடைக்கானல், கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தீர்த்தம் எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியன நடந்தன. நகரில் சுவாமி ரத ஊர்வலம் நடந்தது. நேற்று பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து நகர்வலம் வந்தனர்.