Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ... புத்துமாரியம்மன் கோயிலில் செடல் திருவிழா புத்துமாரியம்மன் கோயிலில் செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
150வது பிறந்த தினம் அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
எழுத்தின் அளவு:
150வது பிறந்த தினம் அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2022
08:08

ஆரோவில்: மகான் அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவை யொட்டி அவரது அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் அரவிந்தர் என்று அழைக்கப்படும் அரபிந்தோ கோஷ். இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக திகழ்ந்து, அதன் பிறகு ஆன்மிகத்தை தழுவினார். இவருடன் அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்பாசும் அரவிந்தரின் ஆன்மீக கடமைகளை இணைந்து செயலாக்கம் செய்தார்.அரவிந்தர் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி 78 வயதில் சித்தியடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறையை தரிசனம் செய்வதற்கு பார்வையாளர்களுக்கு ஆறு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அரவிந்தரின் 150 வது பிறந்த நாளை யொட்டி அரவிந்தர் ஆசிரமம், ஆக.15 தேதி சுதந்திர தினத்தன்று காலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டு, ஆறு மணிக்கு தியான நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அரவிந்தர் அறையை மாலை ஆறு மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல் ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்தீர் மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை4:30 மணியிலிருந்து 6:30 மணி வரை போன் பயர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar