பெ.நா.பாளையம்: கோவை அருகே சோமையனூரில் உள்ள ஸ்வாகதம் சாய் மந்திரில் நடந்த ஸ்ரீ சத்யசாய்பாபா ஜெயந்தி விழாவில், நேற்று வாஸ்து கலசபூஜை நடந்தது. கோவை அருகே சோமையனூரில் ஸ்ரீ சத்யசாய்பாபா கோவிலில் சத்யசாய்பாபா ஐந்து நாள் ஜெயந்தி விழா, திங்கட்கிழமை துவங்கியது. கடைசி நாளான நேற்று காலை 7.00 மணிக்கு மகா கணபதி பூஜை, 8.00 மணிக்கு வாஸ்து கலசம் மற்றும் ஆவஹந்தி கலச பூஜை, வாஸ்து ஜபம் மற்றும் ஆவஹந்தி ஜப பூஜைகள் நடந்தன. 10.00 மணிக்கு மகா வாஸ்து ஹோமம், மதியம் 12.00 மணிக்கு பூரணஹிதி, 12.30 மணிக்கு மங்கள ஆரத்தி பூஜைகள் நடந்தன. மாலை 6.30 மணிக்கு மகா ராமாயணம் காவிய நாடக நிகழ்ச்சியை சாய்கிருப பாலவிகாஷ் குழந்தைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு மங்கள ஆரத்தி நடந்தது. சத்யசாய்பாபா ஜெயந்தியை யொட்டி, ஐந்து நாள் விழாவில் நடந்த ஹோமங்களை ஸ்ரீ வித்யா உபாசகர், புதுக்கோட்டை பிரம்மஸ்ரீ பைரவ சாஸ்திரிகள், ஸ்ரீ மணிகண்ட சாஸ்திரிகள் மற்றும் வேத விற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பட்டன.