கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2013 11:02
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வரும் 27-ம் தேதி கும்பாபஷேகம் நடக்கிறது.கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததார வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த கோவிலில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபஷேகம் நடந்தது. இந்நிலையில் மீண்டும் கும்பாபஷேகம் நடத்த குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி பகவதியம்மன் கோவிலில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கும்பாபஷேக திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து திருக்கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் மூலமும் சுமார் 25-க்கும் மேற்பட்ட திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக தீவிரமாக நடந்து வந்தது.குறிப்பாக மூலஸ்தானம், பரசுராம விநாயகர் கோவில், கோபுர விமானம், கொடிமரம், ஆராட்டு மண்டபம், திருக்கோவில் கதவுகள், ஜன்னல்கள், நவசக்திமண்டபம், காலபைரவர் சன்னதி, வெளிப்பரகாரம், தியாக சௌந்தரி அம்மன் சன்னதி ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு வரும் பப் 27-ம் தேதி கும்பாபஷேகம் நடத்த அரசு ஒப்புதல் வழங்கியது.இதன்படி 27-ம் தேதி காலை 8.45 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் புனித நீருற்றி கும்பாபஷேகம் நடத்தப்பட உள்ளது. கும்பாபஷேகம் நடத்துவதற்கானதேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.