இன்று எங்கும் போதைக் கடைகளைத் திறந்து வைத்து மக்களை மாக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம் என்று சொல்லுமளவு நிலைமை போய்விட்டது. குடி குடியைக் கெடுக்கும் என்பதே இன்றைய சிந்தனை. யாருக்காவது நோய் வந்தால் அவர்களைப் பார்க்க நாம் செல்லலாம். நோயாளிகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நலம் விசாரிக்கச் சொல்லும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரே ஒரு வகையினரை மட்டும் ஒதுக்கச் சொல்கிறார்கள். அது, ""மது அருந்துபவர்கள் நோயுற்றால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள், என்பதாகும். ஆம்... குடியை அண்ணலார் கடுமையாக எதிர்க்கிறார்கள். பிற வகை நோயால் பாதிக்கப்படுபவர்களை நலம் விசாரிப்பதன் மூலம் அவர்கள் ஆறுதலடைவர். ஆனால், குடிகாரன் தனக்கு நோய் வருமென தெரிந்தே தவறு செய்கிறான். தெரிந்து செய்யும் தவறை நாம் எப்படி அனுமதிக்க முடியும்! நோய் வரும் என்று தெரிந்தும், ஒரு கொடிய பானத்தை அருந்துபவனின் முகத்தில் கூட விழிக்கக்கூடாது. குடியை விடுங்கள். குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23