கண்டமங்கலம்: நல்லாத்தூர் வரதராஜபெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவத்தையொட்டி, ராமர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். புதுச்சேரி ஏம்பலம் அடுத்த நல்லாத்தூர் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 5ம் தேதி முதல் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி, தினமும் காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சன்னதி புறப்பாடு, 7:30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. ஊஞ்சல் சேவையில் தினமும் ஒரு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், ராமர் அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுவினர் செய்தனர்.