பதிவு செய்த நாள்
29
ஜூலை
2014
11:07
கம்மாபுரம்: கோ.ஆதனூர் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் செடலணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனூர் முத்துமாரியம்மன் கோவில், செடல் திருவிழா கடந்த 21 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 9:00 மணியளவில் செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து, பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 8:00 மணியளவில் விளக்கு பூஜை நடந்தது. இன்று (29ம் தேதி) காலை 10:00 மணியளவில் மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. அதே போல், சிறுவரப்பூர் செல்லியம்மன் கோவில் திரு விழா, கடந்த 28ம் தேதி துவங்கியது. தினசரி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 8:30 மணியளவில், மணிமுக்தாற்றிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வழிபட்டனர். மாலை 5:00 மணியளவில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.