பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடிப்பூர ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடிப்பூர விழா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு மூலஸ்தானத்தில் அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் ஸ்ரீ ஆண்டாள், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.