மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமிக்கு நேற்றிரவு பட்டாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கோயிலில் சுவாமி சோமஸ் கந்தராகவும், அம்மன் தனியாகவும் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் எழுந்தருளினர். அங்கு வளையல் விற்ற லீலை நடந்தது. மாலையில் மாசி, ஆவணிமூல வீதி, கீழச் சித்திரை வழியாக அம்மன், சுவாமி கோயிலில் நேர்த்தியாகினர். சுவாமி பட்டாபி?ஷக விழாவை முன்னிட்டு கோயில் 16 கால் மண்டபம் சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்தது. தக்கார் கருமுத்து கண்ணன், அம்மன் சன்னதியில் இருந்து 16 கால் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை கோயில் இணை கமிஷனர் நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. பின், சுவாமியிடம் இருந்து செங்கோலை சிவாச்சாரியார் பெற்று, கருமுத்து கண்ணனிடம் கொடுத்தார். செங்கோலை பெற்றுக் கொண்ட அவர், கோயிலின் உள், வெளி பிரகாரங்களை மூன்று முறை வலம் வந்தார். பின், செங்கோலை சுவாமியிடம் ஒப்படைத்தார். கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.