மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று நடக்கும் நரியை பரியாக்கிய லீலைக்காக திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் நேற்று புறப்பட்டார்.செப்., 7ல் மதுரையிலிருந்து விடைபெற்று தல்லாகுளம், உத்தங்குடி, திருமோகூர், திருவாதவூர் மண்டகப்படிகளில் தங்கி, செப்., 12ல் மீண்டும் கோயிலை வந்தடைகிறார். ஏற்பாடுகளை பேஸ்கார் ஜெயப்பிரகாஷ் செய்து வருகிறார்.