பதிவு செய்த நாள்
03
செப்
2014
11:09
எச்சூர் : எச்சூர், ஸ்ரீதேவி காளிகாம்பாள் கோவிலில், நேற்று மாலை ஊரணி பொங்கல் மற்றும் காப்பு கட்டுதல் விழா நடந்தது. சுங்குவார்சத்திரம் அடுத்துள்ளது எச்சூர். இக்கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில், பழமையான ஸ்ரீதேவி காளிகாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, காப்பு கட்டி, ௧௦ நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி, நேற்று மாலை, கோவில் வளாகத்தில், கிராமத்தினர் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவினை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன. வரும், 9ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில், ஸ்ரீதேவி காளிகாம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.