பதிவு செய்த நாள்
04
அக்
2014
09:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் விழா நேற்று நடந்தது. கோயில் நவராத்திரி விழாவில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி வெள்ளி வில், அம்புடன், தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்குள்ள வன்னி மரத்தடியில், வில், அம்பு வைக்கப்பட்டு, சந்தனம், மஞ்சள்பொடி உட்பட திரவிய அபிஷேகங்கள், விக்னேஷ்வர பூஜை, வர்ணபூஜை, முடிந்து எட்டு திக்குகளிலும், பலி பூஜை முடிந்து, சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சார்யாரிடம் வில், அம்பு வழங்கப்பட்டது. அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்தார். தீபாராதனை முடிந்து பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து சேர்த்தி சென்றார்.