மதுரை: மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் தீபாவளியன்று விசேஷ தீப அலங்காரத்தில் ராதாமதுரபதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் கடந்த அக். 8 முதல் ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த தாமோதர தீபத் திருவிழாவை முன்னிட்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சன்னதி முழுவதும் வண்ண மலர்களாலும், நூற்றுக்கணக்கான தீபங்களால் தினமும் அலங்கரிக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் வகையில் தினமும் ஒரு விசேஷ அலங்காரமும் நடைபெறுகிறது. தீபாவளி மற்றும் லெக்ஷ்மி பூஜையை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி விசேஷ தீப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருவருள் புரிந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இதில் பங்கேற்று அனைவரும் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மகிழ்ந்தனர். மேலும் இத்தீபத்திருவிழா நவ.6 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேத சாஸ்திரங்களில் இவ்வாறு பகவானுக்கு இந்த தீப ஆரத்தி காட்டுவதன் மூலம் ஒருவர் எல்லா விதமான நற்பலன்களையும் பெறலாம் என்பதுடன். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளையும் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. -இஸ்கான் ஹறே கிருஷ்ணா கோயில். மணிநகரம். மதுரை.