பரமக்குடி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2014 12:11
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பணியின் முன்னோட்டமாக, கோயில் கோபுரம், விமானங்களுக்கு பாலாலயம் செய்யும் விழா நடந்தது. நவ., 26 மாலை கணபதி பூஜை, முதல்கால யாகபூஜைகள், இரவு 8:00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை 2 ம் கால யாகபூஜையுடன், 10:30 க்கு மகாபூர்ணாகுதிகள் நடந்து, அனைத்து விமான படங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோபுரங்களுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் துவங்கவுள்ளது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை, கோயில் பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.