ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2014 10:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை பட்டு சார்த்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
108 வைணவ தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று மதியம் 1.45 மணிக்கு ,ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்கள் நெசவு செய்யப்பட்ட பட்டு சார்த்தப்பட்டு, ரெங்கமன்னாருடன் வெள்ளிக்கிழமை குறடில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஆண்டாளை தரிசனம் செய்தனர். கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா,வேதபிரான் பட்டர் சுதர்சனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.