வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் ரதசப்தமி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2015 11:01
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் ரதசப்தமி சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லித்தாயார் சமேத வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் கடந்த 26ம் தேதி ரத சப்தமி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம், மதியம் 12:00 மணிக்கு சிறப்பு பூஜை, சாற்றுமுறை நடந்தது. மாலை 6:30 மணிக்கு பெருமாள் கோவிலை வலம் வந்து, இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், சிறப்பு பூஜை நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவர்ணகவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அகோபில மட நிர்வாகிகள் மற்றும் ரதசப்தமி குழுவினர் செய்திருந்தனர்.