பதிவு செய்த நாள்
31
ஜன
2015
10:01
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடைபெற உள்ளது. திருக்கழுக்குன்றத்தில், சைவ சமய குரவர் நால்வரால் பாடப்பெற்ற, வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ள இந்த கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்காக வேதகிரீஸ்வரர் மலைக்கோவில், தாழக்கோவிலில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் ÷ காவில்களில், நவகுண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த, 28ம் தேதி காலை விநாயக பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. நாளை காலை, ஆறாம் கால யாகசாலை பூஜை முடிந்து, காலை 9:30 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
* விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* பேரூராட்சி சார்பில் மலையடிவாரம், பேருந்து நிலையம், தாழக்கோவில் ஆகிய இடங்களில்,2,000 லிட்டர் கொள்ளளவு உள்ள, மூன்று குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
* தாழக்கோவில் வடக்கு கோபுரம் அருகே, இரண்டு தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.
* 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.