புதுார்: மதுரை ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏப்.2 வரை தினமும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏப்.3 அதிகாலை 4 மணிக்கு வைகையில் சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்.5ல் இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து மண்டல அபிஷேகம் நேற்று காலை நடந்தது. காலையில் யாகசாலை பூஜை, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.