பதிவு செய்த நாள்
31
மார்
2015
05:03
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி, தென்பாதியில் ஸ்ரீ கதிர்காம பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. 100 ஆ ண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக் கோயிலின் மகா கு ம்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25 ம் தேதி யாக சாலை பூ ஜைகள் தொடங்கப்பட்டது.நேற்று காலை ஆறாம் கால யாகம் பூஜைகள் முடிந்து 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபா ராதனை, யாத்ரா ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 9.15 மணிக்கு யாக சாலையில் இருந்து கடங் கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து ஸ்ரீ கதிர்காம பாலதண்டாயுதபாணி சன்னதி விமானத்தை அடை ந்தது. 9.20 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந் து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ரத்ன கற்பக வினாயகர், ஸ்ரீ சிந்தாமணி வினாயகர், ஸ்ரீ சிற்றம்பல விõயகர்,ஸ்ரீ பேரம்பல வினாயகர், ஸ்ரீ வேணுகோபால சுவாமி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜபெருமான் சபை மற்றும் சமயாச்சாரியார் ஸ்ரீஅருணகிரிநாதர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷே கம் நடைபெற்றது.10 மணிக்கு ஸ்ரீ கதிர்காம பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேக,ஆராதணைகள் நடை பெற்றது. யாகசாலை பூஜைகள்,கும்பாபிஷேகத்தை திருக்கோலக்கா ராமநாத சிவாச்சாரியார் தலைமை யிலானோர் நடத்திவைத்தனர். மாலை ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்பாள் திருக்கல்யாணமும், ஸ்ரீ கதிர்கா ம பாலதண்டாயுதபாணி வீதியுலாயும் நடைபெற்றது.இந்த விழவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அற ங்காவலர்கள் கணேஷ்குமார், முத்துக்குமார் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர். சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.