Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் மாங்கொட்டை திருவிழா! திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனுஷ்கோடி ராமர் கோயிலில் விபிஷணருக்கு பட்டாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
தனுஷ்கோடி ராமர் கோயிலில் விபிஷணருக்கு பட்டாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

27 மே
2015
06:05

ராமேஸ்வரம்: ராமாயண காவியத்தில் இடம் பெற்ற ராவணன் தம்பி விபீஷணருக்கு தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயிலில் பட்டாபிஷேக விழா நடந்தது.  இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை விடுவிக்குமாறு ராவணனுக்கு அவரது தம்பி விபீஷணர் அறிவுரை கூறினார். அதை ஏற்க மறுத்து, ஆத்திரமடைந்த ராவணன், விபிஷணரை அவமதித்தார். இதனால் விபிஷணர் அங்கிருந்து வெளியேறி, தனுஷ்கோடி வந்தார். அங்கு சீதையை மீட்பது குறித்து லட்சுமணர், அனுமனுடன் ஸ்ரீராமர் ஆலோனை நடத்திக்கொண்டிருந்தபோது வந்த விபிஷணரை ‘உளவாளி’ என அனுமன் கூறினார். அடைக்கலம் தேடி வருவோரை பாதுகாப்பு தான் தர்மம் எனக்கூறிய ராமர், கடல் நீரை எடுத்து வரும்படி லட்சுமணரிடம் கூறுகிறார். லட்சுமணர் எடுத்த வந்த கடல் நீரை விபிஷணர் தலைமையில் புனித நீராக ஊற்றி, அவரை இலங்கை மன்னராக அறிவித்து, ராமர் பட்டாபிஷேகம் சூட்டினார். இதை நினைவு கூறும் விதமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் தங்க கேடயத்தில் புறப்பாடாகி, கோதண்ட ராமர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, கோயில் குருக்கள் ஸ்ரீராம், விபிஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டி வைத்தார். விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோயில் கட்டுமானப்பணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகன், கண்காணிப்பாளர் காகரின் ராஜ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar