பதிவு செய்த நாள்
28
ஜூலை
2015
11:07
ஊத்துக்கோட்டை: ஆடி மாதத்தை ஒட்டி, பவானியம்மன் கோவிலில், ஆடி மாத விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆடி மாத விழா, கடந்த, 17ம் தேதி துவங்கியது. இதில், முதல் ஞாயிற்றுக் கிழமை முதல், 14 வாரங்கள் சிறப்பு பூஜைகளுடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, லட்சக் கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன், சனிக்கிழமை இரவே கோவிலுக்குச் சென்று தங்கி, மறுநாள் அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதில் மொட்டை அடித்தல், அலகு குத்துதல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். மேலும், ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்குச் செல்கின்றனர்.ரூ.9.35 லட்சம் ஒதுக்கீடுஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத விழாவின் போது, கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு, அடிப்படைத் தேவைகளுக்காக, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம், 9.35 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், கோவிலில் வாகனங்கள் நிறுத்தம் மற்றும் இடையூறு இன்றி செல்லும் வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.அனைத்து வசதியும்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதி களையும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் எல்லாபுரம் ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் அம்மினி மகேந்திரன் ஆகியோர் தலைமையில், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.