பாலீஸ்வரர் கோவிலில் குருவார பிரதோஷம்: 108 லிட்டர் பாலாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2015 10:08
கும்மிடிப்பூண்டி: பாலீஸ்வரர் கோவிலில், இன்று, குருவார பிரதோஷத்தை முன்னிட்டு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. புதுகும்மிடிப்பூண்டியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி சமேத பாலீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷ மகிமை கொண்ட சிவ தலங்களுள் ஒன்றாகும். இன்று குருவார பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 4:30 மணிக்கு நந்திகேஸ்வர் மற்றும் பாலீஸ்வரருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகமும், அதை தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், விசேஷ தீபாராதனையும், நடைபெற உள்ளது.