ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2015 11:08
கீழக்கரை: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ராமநாதபுரம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் அடக்கஸ்தலம் உள்ளது. இத்தர்காவின் 841 ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவிற்கு மவுலீது எனும் புகழ்மாலை நிகழ்ச்சி கடந்த ஆக.,16 ல் துவங்கியது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் 40 அடி உயர கொடிமரம் நடப்பட்டது. நேற்று மாலை ஏர்வாடி நல்ல இப்ராகீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து தர்கா வரை ஊர்வலமாக கொடி எடுத்து வரப்பட்டது. மாலை 6.30 க்கு யானை மீது கொண்டு வரப்பட்ட கொடியை ஹக்தார் நிர்வாகத்தினர் பெற்று, கொடியேற்றம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில், தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாருக் ஆலீம், உதவித்தலைவர் செய்யது சிராஜுதீன், மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெவ்வை, அஜ்முல் ரகுமான் உட்பட அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர்.