பாதுார் அய்யனார் கோவிலில் சுவாமி குதிரை சவாரி வைபவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2015 11:09
உளுந்துார்பேட்டை: பாதுார் பூரணி பொற்கலை அய்யனார் கோவிலில் நடந்த சுவாமி குதிரை சவாரி வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா பாதுார் பூரணி பொற்கலை அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் விழாவையொட்டி, கடந்த மாதம் 4ம் தேதி காப்பு கட்டுதல், 18ம் தேதி காலை சிறப்பு பூஜை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் 13வது நாளான நேற்று காலை ௮.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜை நடந்தது. பக்தர்கள் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மதியம் 3:30 மணிக்கு அய்யனார் சுவாமி, மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலம் புறப்பட்டது. தொடர்ந்து, சுவாமி குதிரை சவாரி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள், சுவாமிக்கு மாலை அணிவித்து தீபாராதனை செய்தனர். மாலை 6:15 மணிக்கு ஏரியிலுள்ள அய்யனார் மண்டபம் அருகே குதிரை சவாரி வலமும், பாரி ஓட்டமும் நடந்தது. பக்தர்கள் கம்பு உள்ளிட்ட தானியங்களை அய்யனார் சுவாமி மீதும், குதிரை சவாரி மீதும் வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர்.