பதிவு செய்த நாள்
02
செப்
2015
11:09
பெசன்ட் நகர்: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில், மாதாவுக்கு சேலையை நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில், திருவிழா நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான, நேற்று, துறவர சபைகள் விழாவாக சிறப்பிக்கப்பட்டது. அதிகாலை 5:30, 6:30 மணிக்கு, தமிழிலும், காலை, 7:30 மணிக்கு, ஆங்கிலத்திலும் திருப்பலி நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, ஜெபமாலை, நவநாள் ஜெபம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, கடற்கரை சாலையில் மாதா தேர்பவனி நடைபெற்றது. திருவிழாவுக்கு வந்தவர்களில், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மாதாவுக்கு புடவை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும், 7ம் தேதி, அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடைபெற உள்ளது.