புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி தருமாபுரி ஆஞ்ஜநேய சுவாமிகள் கோவிலில் வருடாபிஷேக விழா, நேற்று முன் தினம் துவங்கியது. முதல்நாளில் அனுமன் மூல மந்திர ஹோமம் நடந்தது. இரண்டாம நாளான நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், காயத்ரீ மந்திர ஹோமம் நடந்தது. பின், பால்குட ஊர்வலம், திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சீதாராமகல்யாண உற்சவம் நடந்தது. இரவு 8 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.