பதிவு செய்த நாள்
20
பிப்
2016
12:02
கோலாலம்பூர்: மலேசியா, பினாங், பட்டு கவானில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காணவும், முருகன் அருள் பெறவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடைபெறும்.
இந்த கோயிலில் பிரதான சந்நிதி நீங்கலாக, 11 மீட்டர் னாயர முருகன் சிலையும், 25 மீட்டர் உயர வேலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 1.6 ஏக்கர் நிலப்பபரப்பில், 18 லட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் முருகனின் பல்வேறு திருஉருவங்கள் உள்ளன.
கோயிலை ஒட்டியுள்ள தாமரைக் குளக்க் கரையில், ஒரு கோபுரமும், முருகப்பெருமானை வளர்த்த 6 கார்த்திகை பெண்களின் சிலைகளும் உள்ளன. கோயில் வளாகத்தில் ஏராளமான மயில்களும் உள்ளன. கோயிலில் வழக்கமான வழிபாடுகளுடன், மதம் மற்றும் கலாச்சார வகுப்புகளும் நடைபெறும்.