பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2016 11:04
பொன்னேரி: பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் கரிகிரு ஷ்ண பெருமாள், பூதேவி, தேவி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பி டித்து இழுத்தனர். தேர் மாலை 6 மணி அளவில் தேரடியில் நிலையை அடைந்தது.