பழநி: ஞாயிறு விடுமுறையால் பக்தர்கள் பழநியில் குவிந்தனர். இதனால் சுவாமிதரிசனம் செய்ய 3மணி நேரம் காத்திருந்தனர். பழநியில் நேற்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தீர்த்தக்குடங்கள், காவடிகள், பால்குடங்களுடன் பக்தர்கள் குவிந்தனர். இதனால் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்றனர். வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் 3 மணிநேரம் காத்திருந்து, பொதுதரிசன வழியில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.