சத்தியமங்கலம் பண்ணாரி கோவிலை சுற்றி பந்தல் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2016 11:05
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டது. அமாவாசையை முன்னிட்டு அம்மனை தரிசிக்க அதிக அளவிலான பக்தர்கள் இன்று பண்ணாரி கோவிலுக்கு வருவர். தற்போது கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோவில் நுழைவாயிலில் இருந்து, கோவிலை சுற்றி பக்தர்கள் செல்ல வசதியாக கோவில் நிர்வாகத்தினர், நடைபாதை முழுவதும் பிளாஸ்டிக் அட்டை மூலம் பந்தல் போட ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், கோவிலைச் சுற்றி வர, கடும் வெயிலில் நேரடியாக செல்ல வேண்டியிருக்காது என பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.