பதிவு செய்த நாள்
30
மே
2016
11:05
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வா ய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபி÷ ஷகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி, காலை 7:45 மணிக்கு துவங்கியது. அன்று முதல், சுவாமியை குளிர்விக்கும் வகையில், ’தாரா பாத்திரத்தில்’ நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்களால், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று முன்தினம், அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதையொட்டி, மூலநாதர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு, பகல் 12.00 மணிக்கு பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 11 முறை ருத்ரபாராயணம் செய்யப்பட்டு, அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபி÷ ஷகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.