நோன்பு இன்னும் சில நாட்களில் முடிந்து விடும். நோன்பு காலத்தில் பிரதானம் தொழுகை. தொழுகையைப் போன்றே ஏழைவரியும் கட்டாயக் கடமையாக இருக்கிறது. ஏழை வரி என்பது, நமது சம்பாத்தியத்தில், நமது அத்தியாவசியத் தேவை போக எஞ்சிய பணத்தில், நாற்பதில் ஒரு பங்காவது ஏழைகளுக்கு தானம் செய்வதாகும்.
நபிகள் நாயகம் இதுபற்றி சொல்லும் போது, “எவர் ஏழைவரி (ஜகாத்) கொடுக்கவில்லையோ, அவர் தொழாதவர் போன்றவரே! அவர் நரக நெருப்பிற்கு ஆளாவார்” என்கிறார். இக்காலத்தில் தானம் செய்தால் சொர்க்கத்தின் கதவுகள் நமக்காக திறக்கும். அவ்வாறு தர்மம் செய்த பிறகு, “நான் இவ்வளவு தர்மம் செய்தேன். தர்மத்தில் என்னை விஞ்சியவர் யாருமில்லை” என பெருமையடிக்கக் கூடாது. பிறர் நம்மைப் பெருமையாக பேச வேண்டும் என்பது தர்மத்தின் நோக்கமல்ல. அதை இறைவன் மட்டுமே அறிய வேண்டும். இதை மனதில் கொண்டு விரைவில் ஏழைகளுக்கு தர்மம் செய்து இறைவனின் அன்புக்கு பாத்திரமாகுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி.