திருப்பதி: திருமலையில், பிரம்மோற்சவம் நடந்து வரும் நிலையில், பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று (அக்.4ல்) மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் தபசு கோலத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ தினத்தில், தமிழகத்தில் இருந்து, அதிக பக்தர்கள், திருமலைக்கு வருவர். ஆனால், பிரம்மோற்சவம் துவங்கிய நிலையில், திருமலையில், தமிழக பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கன மழையால், அம்மாநிலங்களின் பக்தர்கள் கூட்டமும் குறைந்துள்ளது. தினமும், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்த உண்டியல் வருவாய், சில தினங்களாக, இரண்டு கோடி ரூபாயை விட குறைந்து விட்டது.