பதிவு செய்த நாள்
22
அக்
2016
12:10
கொளத்தூர்: கொளத்தூர் ஒன்றியம், காவேரிபுரம் பஞ்சாயத்து, கண்ணனூர் மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்ட நிலையில், அக்.,21 முன்தினம், கோட்டையூர் காவிரியாற்றில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அக்.,21 காலை, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அபிஷேகம், ஆராதனையில், கொளத்தூர் பகுதியை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.