பதிவு செய்த நாள்
10
ஜன
2017
05:01
திருப்பாற்கடலில் அரிதுயிலில் ஆழ்ந்திருக்கும் ஹரி, பூவுலகில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சியளிப்பதை எட்டு வகைகளாகப் பிரித்துக் கூறுவார்கள். எந்தெந்தத் தலத்தில் எந்த வகையான திருக்கோலத்தில் திருமால் சேவை சாதிக்கிறார், தெரியுமா?
1. உத்யோக சயனம் குடந்தை சார்ங்கபாணி திருக்கோயில். 2. மாணிக்க சயனம் திருநீர்மலை 3. தலசயனம் திருக்கடல் மல்லை, 4. தர்ப்ப சயனம் திருப்புல்லாணி, 5. போக சயனம் தில்லை சித்ரக்கூடம், 6. வீரசயனம் திருவழுந்தூர், மயிலாடுதுறை, 7. வடபத்ர சயனம் திருவில்லிபுத்தூர் (வடபத்ரசாயி கோயில்), 8. புஜங்க சயனம் திருவரங்கம், அன்பில், ஆதனூர், திருவள்ளூர், உத்தமர் கோயில், திருச்சிறுப்புலியூர் திருப்புள்ளம் பூதங்குடி, திருவிழாங்கூர், வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருப்பேர் நகர் (கோயிலடி), திருவெற்றிக்குடி, திருவெஃகா முதலான தலங்கள்.