கயத்தாறில் அமைந்துள்ளது, கோதண்டராமசுவாமி கோயில். இது, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு முந்தையதாகும். ராமர், ராவணனை அழிக்கப் போகும்போது இங்கு வில்லை ஊன்றி தீர்த்தம் எடுத்து சிவபெருமானை பூஜை செய்து சென்றதாக வரலாறு. இங்குள்ள தூணில் ஆஞ்சநேயர் பாறாங்கல்லை தலைக்கு மேல் தூக்கி நிற்கும் சிற்பங்களைக் காணலாம். இங்குள்ள சிவன்கோயிலில் இருக்கும் பைரவமூர்த்தி சிலையை பின்பக்கமும் தரிசிக்கலாம். அதேபோல சனீஸ்வர பகவான் ஆவுடையின் மேல் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலையில் முயலகனும் பாம்பும் வலதுபக்கத்தில் தோற்றமளிக்கிறது. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் கிடையாது என்கிறார்கள்.